60 வயதில் இளம் பெண்ணை மூன்றாவது திருமணம் செய்த பிரபலம்.. வாரிசு இல்லாததால் தனிமையில் வாடும் நடிகை

சினிமா துறையைச் சேர்ந்த பிரபலம் ஒருவர் திரை துறையில் பேரும் புகழுடன் இருந்து வந்தார். இந்நிலையில் அவருடைய முதல் இரண்டு திருமணங்கள் பாதியிலேயே முடிந்தது. இதனால் நீண்ட நெடுங்காலம் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே இருந்து வந்தார்.

ஒரு கட்டத்திற்கு மேல் வயது முதிர்வின் காரணமாக தனக்கு ஒரு துணை வேண்டும் என்பதை பிரபலம் புரிந்து கொண்டார். அப்போது அவருக்கு 60 வயது உள்ள நிலையில் 27 வயதுடைய இளம் நடிகையை திருமணம் செய்து கொண்டார். நடிகை ஆரம்பத்தில் சினிமாவில் கொடி கட்டி பறந்தார்.

அதன் பின்பு வெள்ளித்திரையில் வாய்ப்பு குறையவே சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். அப்போது அவர் நடித்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அப்போது அந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போது தான் அந்த மூத்த பிரபலத்தை மணந்து கொண்டார்.

திருமணமான சில வருடங்களில் இவரது கணவர் இறந்து விட்டார். இளம் வயதிலேயே விதவையான நடிகை அதன் பின்பு மறுமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. மேலும் இவருக்கு வாரிசும் இல்லாததால் தற்போது தனிமையில் வாடி வருகிறார். அவ்வப்போது வெள்ளித்திரையில் ஒரு சில பட வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

ஹீரோக்களின் அக்கா, அம்மா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் தனது இளமைக்காலத்தில் எடுத்த தவற முடிவினால் மிகக் குறுகிய காலத்திலிருந்து மண வாழ்க்கையும் முடிந்து, தனக்கான வாரிசும் இல்லாமல் நிற்கதியாக தனது வாழ்க்கையை ஒட்டி கொண்டிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →