குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து மிக குறுகிய காலத்திலேயே ஹீரோயின் அந்தஸ்தை பெற்றவர்தான் அந்த நடிகை. அது மட்டுமல்லாமல் தன்னுடைய நடிப்பினால் அனைவரையும் கட்டிப்போட்ட இவர் ஏராளமான விருதுகளையும் பெற்றிருக்கிறார்.
இப்படி புகழின் உச்சியில் இருந்தும் அவர் தனக்கு நடந்த நம்பிக்கை துரோகத்தை தாங்க முடியாமல் 17 வயதிலேயே தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். தன்னை வைத்து படம் எடுத்த மூத்த இயக்குனர் ஒருவரை ஆத்மார்த்தமாக காதலித்த இந்த நடிகை 16 வயதிலேயே அவரை ரகசிய திருமணம் செய்து கொண்டார்.
இத்தனைக்கும் அந்த இயக்குனருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி பிள்ளையும் இருந்தது. ஆனாலும் இந்த நடிகைக்கு அவர் மீது பைத்தியக்காரத்தனமான ஒரு காதல் இருந்திருக்கிறது. அதுவே அவருடைய வாழ்க்கை பாதியிலேயே முடிவதற்கும் காரணமாக போய்விட்டது.
ஏனென்றால் அந்த வில்லங்கமான இயக்குனர் இந்த நடிகையின் அம்மாவுடனும் கள்ள தொடர்பில் இருந்திருக்கிறார். அதை மறைத்து தான் இந்த நடிகையிடம் அவர் ரூட்டு போட்டு இருக்கிறார். இது எதுவுமே தெரியாத அந்த நடிகை காதல் என்ற வார்த்தையை மட்டுமே நம்பி அவரை திருமணம் செய்து இருக்கிறார்.
ஒரு கட்டத்தில் இந்த நம்பிக்கை துரோகம் அவருக்கு தெரிய வர வாழ்க்கையை வெறுத்து தன் முடிவை தேடிக்கொண்டார். ஆனால் இன்று வரை அவருடைய மரணம் சில மர்மங்களால் சூழப்பட்டு தான் இருக்கிறது. ஆனாலும் அதற்கு ஒரே காரணம் என்றால் அந்த இயக்குனர் தான். இந்த குற்ற உணர்வு கொஞ்சம் கூட இல்லாத அவர் அடுத்ததாக வேறு ஒரு நடிகையை தன் வலையில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.