பிரபல நடிகை ஒருவர் உச்ச நட்சத்திரங்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பீக்கில் இருந்தார். அப்போது அடுத்தடுத்த மார்க்கெட் வர சம்பளமும் பல மடங்கு உயர்ந்தது. ஆசை யாரை தான் விட்டது என்பது போல நடிகைக்கு பண ஆசை வந்துள்ளது. சினிமாவில் நிறைய பணம் எடுக்க வேண்டும் என்றால் ஒரே வழி தயாரிப்பாளர் ஆவது தான்.
அதனால் சொந்தமாக பட தயாரிப்பு தொடங்கி அதன் மூலம் முதல் படத்தை தயாரித்தார். தான் சம்பாதித்த மொத்த பணத்தையும் போட்டு தான் அந்த படத்தை எடுத்தார். போதாக்குறைக்கு பிரபல பைனான்சியர் இடமும் பணம் வாங்கி படத்தில் போட்டுள்ளார். ஆனால் படம் எதிர்பார்க்காத அளவு ஊத்திக் கொண்டது.
இதனால் நடிகை கடனாளி ஆகிவிட்டார். மேலும் பைனான்சியரிடம் வாங்கிய பணத்தை கொடுக்க முடியாமல் அல்லோல பட்டார். பைனான்சியரின் சொந்த ஊருக்கு நடிகையை வரவழைத்தனர். பணம் கொடுத்தால் தான் இங்கிருந்து போகும் முடியும் என டார்ச்சர் செய்துள்ளனர்.
இப்போதைக்கு தன்னிடம் பணம் இல்லை, இன்னும் சில மாதங்களில் எப்படியாவது உங்கள் கடனை அடைத்து விடுகிறேன் என்னை விட்டு விடுங்கள் என நடிகை கெஞ்சி உள்ளார். பைனான்சியர் இதற்கு சம்மதிக்காமல் தன்னை அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய சொல்லி உள்ளார்.
இதில் நடிகைக்கு விருப்பமில்லை என்றாலும் வேறு வழியில்லாமல் ஒத்து கொண்டுள்ளார். மேலும் பைனான்சியரை திருப்தி படுத்திய பிறகும் நடிகையை விட்ட பாடு இல்லை. எனக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறது அப்போது உன்னை அழைப்பேன் என்று நடிகையை வரவழைத்து உல்லாசமாக இருந்தாராம்.