மூக்கு முட்ட குடிச்சிட்டு காரில் மோதிய விஷால் பட நடிகை.. போதை தெளிந்த பின் பட்ட அசிங்கம்

பொதுவாக ஒரு சில சினிமா நடிகைகள் இரவு பார்ட்டியில் நன்றாக குடித்துவிட்டு சாலையில் விபத்து ஏற்படுத்தி உள்ளதாக நிறைய செய்திகள் வந்து நாம் கேட்டிருக்கிறோம். அந்த வகையில் விஷால் பட நடிகை மது போதையில் செய்த விஷயம் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அதாவது விஷால் நடிப்பில் வெளியான வாகை சூடவா படத்தில் நடித்தவர் டிம்பிள் ஹயாத்தி. இவர் தமிழைத் தாண்டி தெலுங்கு மொழியில் தான் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அதுவும் இவர் காட்டும் தாராள கவர்ச்சி ரசிகர்களை கிரங்கடிக்க வைக்கிறது. இந்த சூழலில் அவர் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதாவது ஐஏஎஸ் அதிகாரியின் கார் பார்க்கிங்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்தக் காரின் மீது தன்னுடைய காரை மோதிவிட்டு நிறுத்தாமல் நடிகை டிம்பிள் செய்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இரவு பாட்டில் நன்றாக குடித்துவிட்டு டிம்பிள் மற்றும் அவரது காதலர் இருவரும் சென்றுள்ளனர்.

அப்போதுதான் இந்த ஆக்சிடெண்ட் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போது டிம்பிள் பாய் பிரண்டு தான் ஐஏஎஸ் அதிகாரி ராகுல் ஹெக்டே காரை மோதி உள்ளது என்பது தெரியவந்துள்ளது. மேலும் காரின் உரிமையாளர் என்பதால் டிம்பிள் மீது வழக்கு தொடரப்பட்டது.

இந்நிலையில் நடிகை டிம்பிள் தனது வழக்கறிஞருடன் ஆஜரானார். இந்த சூழலில் அவர் தனது சமூக வலைத்தளத்தில் போட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. அதாவது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ஐபிஎஸ் அதிகாரியை சாடும் விதமாக டிம்பிள் ட்விட் செய்துள்ளார்.

இப்போது இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் கோபிசந்த்-க்கு ஜோடியாக டிம்பிள் ஹயாத்தி ராமபாணம் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஐந்தாம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் நடிகைக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்துள்ளது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →