முதலாளியுடன் அந்தரங்க உறவில் இருந்த கேரளத்து அம்மணி.. நைசா பின்வாசல் வழியாக வந்து சென்ற இயக்குனர்

யாரும் யோசிக்காத வகையில் வித்தியாசமான முறையில் படம் எடுப்பவர் தான் இந்த இயக்குனர். இப்படி எல்லாம் கூட நடக்குமா என்று கேட்கும் வகையில் பல கொடூர சம்பவங்கள் இவருடைய படத்தில் இருக்கும். அப்படிப்பட்ட இந்த இயக்குனர் நிஜ வாழ்க்கையிலும் ஒரு மார்க்கமானவர் தான்.

அதனாலேயே இவர் கடும் விமர்சனங்களை சந்தித்ததுண்டு. அது மட்டுமல்லாமல் பொது நிகழ்ச்சிகளில் இவர் பேசினாலே சர்ச்சைகள் வெடிக்கும். ஆனாலும் தன்னை ஒரு நியாயவாதியாகவே இவர் காட்டிக் கொள்வார். அப்படிப்பட்ட இவர் தனிப்பட்ட முறையில் ஒரு காம கொடூரனாக இருக்கிறார் என்பது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

அப்படித்தான் இவர் இயக்கிக் கொண்டிருக்கும் ஒரு படத்தில் மலையாள சேச்சி ஒருவர் ஹீரோயினாக நடித்து வந்தார். தயாரிப்பாளருக்கு அவரின் மேல் ஒரு கண் இருந்ததால் மொத்தமாக நடிகையை தன் கண்ட்ரோலில் வைத்திருந்தார். இது தெரிந்தும் கூட அந்த இயக்குனர் தயாரிப்பாளருக்கு தெரியாமல் நடிகையை நேக்காக உஷார் செய்திருக்கிறார்.

அதன் விளைவாக அடிக்கடி நடிகையுடன் எக்கு தப்பாகவும் இருந்திருக்கிறார். ஒருமுறை இந்த இயக்குனர் அந்த ஹீரோயின் உடன் குண்டக்க மண்டக்க இருந்த போது தயாரிப்பாளர் அந்த இடத்திற்கு வந்திருக்கிறார். இந்த விஷயம் தெரிந்ததுமே இயக்குனர் முன்வாசல் வழியாக ஓடினால் மாட்டிக் கொள்வோம் என பின் வாசல் வழியாக தெறித்து ஓடி இருக்கிறார்.

ஆனாலும் இந்த விவகாரம் தயாரிப்பாளரின் காதுக்கு சென்றிருக்கிறது. அதாவது அந்த வீட்டின் செக்யூரிட்டி இந்த சங்கதியை போட்டுக் கொடுத்திருக்கிறார். உடனே கடுப்பான அந்த தயாரிப்பாளர் நடிகையை சொந்த ஊருக்கே பேக் செய்து அனுப்பி விட்டாராம். இதனால் ஏமாந்து போன அந்த இயக்குனர் வேறு ஒரு நடிகையிடம் தன் லீலையை தொடர்ந்திருக்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →