5 Actresses Ruined Their Careers Playing Glamour Characters: இப்போது உள்ள பெரும்பாலான நடிகைகள் கவர்ச்சியை நாடி சென்று கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அப்போதுதான் அவர்களுக்கு பட வாய்ப்பு வருகிறது என்ற எண்ணம் உருவாகி இருக்கிறது. ஆனால் அந்த காலத்தில் கிளாமர் ரோலில் நடித்து தனது வாழ்க்கையை நாசமாக்கி கொண்டுள்ளனர். அவ்வாறு உள்ள 5 நடிகைகளை இப்போது பார்க்கலாம்.
சுவேதா பாசு : குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் அறிமுகமானவர்தான் சுவேதா பாசு. இவர் பல படங்களில் கவர்ச்சி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அதுவும் கருணாஸ் நடிப்பில் வெளியான சந்தமாமா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இவர் தவறான தொழில் செய்த வழக்கில் சிக்கி இருந்தார்.
கரோலின் மரியா : வாடா செல்வம் படத்தில் கதாநாயகியாக நடித்தவர்தான் கரோலின் மரியா. இவர் அதிகமாக கிளாமர் காட்சிகளில் தான் நடித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் இவரையும் அந்தரங்க தொழில் செய்வதாக போலீஸ் கைது செய்தனர். கவர்ச்சியால் இவரது வாழ்க்கையும் தலைகீழாக மாறியது.
மாதுரி : குடும்ப பங்கான முக பாவனை இவருக்கு இருந்தாலும் அதிகம் கவர்ச்சி கதாபாத்திரங்களில் தான் மாதுரி நடித்து இருக்கிறார். மேலும் பல முன்னணி நடிகர்களின் படங்களில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் தான் நடித்திருந்தார். இதன் காரணமாக அவரது சினிமா கேரியர் பாதியிலேயே முடிவுற்றது.
சங்கீதா பாலன் : இவர் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் பயங்கர வில்லியாக நடித்திருப்பார். இவரும் சில கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்த நிலையில், அதன் பிறகு அந்தரங்க வழக்கில் சிக்கி சர்ச்சையை சந்தித்தார்.
நிஷா நூர் : தமிழ் மற்றும் மலையாளம் போன்ற மொழி படங்களில் அதிகம் நடித்தவர் நிஷா நூர். இவர் கமல் நடிப்பில் வெளியான டிக் டிக் டிக் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். பெரும்பாலும் கிளாமர் கதாபாத்திரங்களில் நடித்து வந்த நிஷா நூர் உயிர்க்கொல்லி நோயால் கடந்த 2007ஆம் ஆண்டு உயிரிழந்தார்.