குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, அதன் மூலம் ரொம்ப சின்ன வயதிலேயே ஹீரோயினாக நடிக்க ஆரம்பித்த நடிகை அவர். மூர்த்தி சிறியது என்றாலும் கீர்த்தி பெரியது என்பது போல் சின்ன வயதிலேயே பல ஆழமான கேரக்டர்களை தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றவர். சின்ன சின்ன முக அசைவில் கூட நடிப்பை வெளிப்படுத்தக் கூடியவர்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த இந்த நடிகை, மிகப்பெரிய வெற்றியை பார்த்திருக்க வேண்டியவர். ஆனால் துரதிஷ்டவசமாக ஒரு படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் பொழுது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் ஒட்டுமொத்த சினிமா உலகையும், சினிமா ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இறந்து கிட்டத்தட்ட 40 வருடங்கள் ஆகியும் இவருடைய மரணம் மர்மமாகவே இருக்கிறது.
இந்த நடிகைக்கு தன்னைவிட வயதில் மூத்த ஒரு இயக்குனருடன் திருமணத்தை தாண்டிய உறவு இருந்தது அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஏற்கனவே திருமணம் ஆன இந்த இயக்குனர், இந்த நடிகையையும் திருமணம் செய்து கொண்டதாகவும், என்னுடைய மனைவி என்று கூட அதிகாரப்பூர்வமாக சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த நடிகையின் மரணத்திற்கு காரணம் இவர்தான் என்று இன்றுவரை சினிமா உலகம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த நடிகைக்கு அதிக ரசிகர்கள் இருந்த காரணத்தால், தன்னுடைய பண தேவைக்காக இயக்குனர் அவரை அந்தரங்க தொழிலுக்கு வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்த நடிகை புகழின் உச்சியில் இருந்ததால் அவருடைய அந்தரங்க வீடியோக்களை படமாக்கி விற்றாலே பணம் அதிகமாக கிடைக்கும் என பேராசை கொண்ட இயக்குனர் நடிகையை அதற்காக வற்புறுத்தியும் இருக்கிறார்.
மேலும் தன்னைவிட 20 வயது குறைவான இந்த நடிகையுடன் உறவில் இருக்கும் பொழுதே, வேறொரு நடிகையையும் தன்னுடைய காதல் வலையில் சிக்க வைத்திருக்கிறார் இயக்குனர். பக்குவப்படாத வயது என்பதால் தான் காதலித்த ஒருவர் தனக்கு எதிராக இவ்வளவு விஷயம் செய்கிறார் என்ற கவலையில் தான் அந்த நடிகை தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது. இன்னும் சிலர் நடிகையை கொலை செய்துவிட்டு இயக்குனர் தற்கொலை என்று நாடகமாடியதாக கூட சொல்கிறார்கள்.