5 வருட காதல் கணவருக்கு அதிரடியாக விவாகரத்து கொடுத்த நடிகை.. அப்போ அது வதந்தி இல்ல உண்மைதானா.!

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே ரசிகர்களிடம் அமோக வரவேற்பு பெற்ற நடிகை ஒருவர், அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்து கமிட்டாகி நடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இவருக்கு திடீரென்று வெளிநாட்டு மாப்பிள்ளை உடன் திருமணம் நடந்தது.

திருமணமான கையோடு நடிகையும் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். சில வருடத்திற்கு முன்பு மீண்டும் நடிக்கத் துவங்கிய நடிகை கணவருடன் இணைந்து இருந்த புகைப்படத்தை எல்லாம் சோசியல் மீடியாவில் இருந்து அதிரடியாக தூக்கினார்.

இந்த சம்பவம் 3 வருடத்திற்கு முன்பே நடந்தது. இதனால் அதிர்ந்து போன ரசிகர்கள் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறீர்களா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நடிகை, சினிமாவையும் சொந்த வாழ்க்கையும் பிரித்து பார்க்க விரும்புகிறேன்.

அதனால் தான் இப்படி செய்துள்ளேன் என்று விளக்கமளித்து விவாகரத்து வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அதைத்தொடர்ந்து சில காலம் சோசியல் மீடியாவை ஒதுங்கி இருந்தார். தற்போது அந்த நடிகை சமூக வலைதளங்களில் போட்டோசூட் புகைப்படங்களை பதிவிட்டுக் கொண்டிருக்கிறார்.

அது மட்டுமல்ல மூன்று வருடத்திற்கு முன்பு வதந்தியாக வந்த செய்தியை இப்போது உண்மையாக்கி விட்டார். அந்த நடிகை தன்னுடைய 5 வருட காதல் கணவருக்கு அதிரடியாக விவாகரத்து கொடுத்து விட்டார். இதற்கு காரணம் இருவருக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடு தான்.

சினிமாவை விட்டு விலக முடியாமல் இருந்த அந்த நடிகை, கடந்த ஆண்டு சர்ச்சைக்குரிய ஆந்தலாஜி வகை படத்தில் கணவர் நடிக்க கூடாது என சொல்லியும் அதை மீறி நடித்தார். கணவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை முற்றி இருவரும் பிரிந்து விட்டனர். இப்போது அந்த நடிகை சுதந்திர பறவையாக சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி கொண்டு இருக்கிறார்

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →