50 ஆயிரத்துக்கு ஃபாரின் சரக்கடித்து மட்டையான நடிகை.. வசமாக சிக்கிய அப்பாவியின் தலையில் விழுந்த பில்

பிரபல நடிகை ஒருவர் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் தன்னுடைய இஷ்டத்துக்கு ஜாலியாக பொழுதை போக்குவது வழக்கம். அப்படித்தான் அவர் பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றுக்கு சென்று இருக்கிறார்.

அங்கு அவர் ஃபாரின் சரக்கை குடித்துவிட்டு மட்டையான சம்பவம் தான் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதிலும் நடிகை ஆயிரம் அல்ல, இரண்டாயிரம் அல்ல ஐம்பதாயிரத்துக்கு சரக்கு அடித்திருக்கிறார் என்பது கேட்பவர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

இதைக் கூட பொறுத்துக் கொண்டவர்களால் அடுத்து நடந்த சங்கதியை தான் ஏற்கவே முடியவில்லை. அதாவது இவ்வளவு காஸ்ட்லியான சரக்கை அடித்த அந்த நடிகை பில்லை ஒரு அப்பாவியின் தலையில் கட்டி இருப்பது தான் சலசலப்புக்கு காரணமாக இருக்கிறது.

பொதுவாக நடிகைகள் ஷூட்டிங் சமயத்தில் தங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொண்டு தயாரிப்பாளர்கள் தலையில் மொத்த காசையும் கட்டி விடுவார்கள். அப்படித்தான் இந்த நடிகையும் ஒரு நிகழ்ச்சிக்காக அங்கு சென்றபோது நிகழ்ச்சியை நடத்தியவர்களிடமே அந்த பில்லை கட்ட சொல்லி இருக்கிறார்

நடிகை எப்போதுமே இது போன்ற நிகழ்வுகளுக்கு செல்லும்போது அதற்காக ஒரு பெரிய அமௌன்ட்டை கறந்து விடுவார். அதில் சரக்கடித்த பில்லையும் அவர் சம்பந்தப்பட்டவர்களின் தலையில் கட்டியது பேரதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. நடிகைக்கு இதுபோன்று பல முகம் இருக்கிறது என்று இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கோடம்பாக்க வட்டாரம் நக்கலடித்து வருகிறது.