பெரிய நடிகர் செய்த கேவலமான செயல்.. ரசிகை என்றால் எல்லாத்துக்கும் வந்து விடுவார் என நினைத்து அசிங்கப்பட்ட கொடுமை. !

Gossip News: தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகர் என பெயர் பெற்றவர் இவர். அதே நேரத்தில் இவருக்கு இல்லாத கெட்ட பழக்கங்களே கிடையாதாம். இவருடன் முன்னணி ஹீரோக்களாக இருந்த பலரும் திருமணம், குழந்தை, குட்டி என ஆன பிறகும் இவர் மட்டும் திருமணம் செய்து கொள்ளாமல் ரொம்ப ஜாலியாக வந்த பணத்தை வைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்திருக்கிறார்.

இந்த நடிகருக்கு பெண் ரசிகைகளும் அதிகமாக இருந்திருக்கிறார்கள். எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் இவரைத் தேடி ரசிகைகள் கூட்டம் கூடி விடுவார்களாம். நடிகருக்கும் பெண் ரசிகைகள் மற்றும் உடனடிக்கும் நடிகைகளுடன் அரட்டை அடிப்பது, அவர்களை காதலில் வீழ்த்துவது என பல சேட்டைகளை செய்து வந்திருக்கிறார்.

இப்படி படப்பிடிப்புக்கு வந்த ரசிகை ஒருவரை நடிகருக்கு ரொம்பவே பிடித்து விட்டதாம். அந்த நடிகையின் அழகில் மயங்கிய இந்த பெரிய நடிகர் தயாரிப்பு தரப்பில் இருந்தவர்களிடம் தன்னுடைய ஆசையை சொல்லி, ஏற்பாடு செய்யுமாறு கேட்டு இருக்கிறார். கேட்டது உச்ச நட்சத்திரம் என்பதால் அவர்களும் ரசிகையிடம் பேசி இருக்கிறார்கள்.

வெளிப்படையாக அந்த ரசிகையிடம் எதுவும் சொல்லாமல், அந்த உச்ச நடிகர் உங்கள் வீட்டில் வந்து சாப்பிட ஆசைப்படுகிறார் என்று மறைமுகமாக சொல்லி இருக்கிறார்கள். இதை புரிந்து கொள்ளாத ரசிகை அவர் நம் வீட்டிற்கு வருவதே மிகப்பெரிய பாக்கியம் என்று அதற்கு சம்மதம் சொன்னதோடு தடபுடலாக விருந்தையும் ரெடி பண்ணி இருக்கிறார்.

ரசிகை தன்னுடைய ஆசைக்கு இணங்கி விட்டதாக தவறாக நினைத்துக் கொண்ட அந்தப் பெரிய நடிகர் ரசிகையின் வீட்டிற்கு சென்றதோடு சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டு இருக்கிறார். அவருடைய எண்ணத்தை புரிந்து கொண்ட ரசிகை, இவ்வளவு பெரிய நடிகராக இருந்து கொண்டு இது போல் செய்வது சரி இல்லை, நான் உங்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருந்தேன் என்று சொல்லி துரத்தி விட்டு இருக்கிறார். இத்தனைக்கும் அந்த ரசிகை ஏற்கனவே திருமணம் ஆனவராம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →