தாலி வாங்குவதற்கு முன்பே பிள்ளை வாங்கிய நடிகை.. இனிஷியல் பிரச்சனையால் புது லவ்வரை பிடித்த கேவலம்

கலி முத்திடுச்சு என்று தான் அந்த நடிகையை பார்த்தால் சொல்லத் தோன்றுகிறது. டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த நடிகை காதல் மயக்கத்தில் சினிமாவை கூட மறந்து காதலருடன் சுற்றித் திரிந்தார். விரைவில் கல்யாணம் என்று கூட இந்த ஜோடி அறிவித்தது.

ஆனால் அதற்கு முன்பே நடிகை வாந்தி எடுத்துவிட்டார். இதனால் பிள்ளை பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று புது ட்ரெண்ட்டை அந்த நடிகை உருவாக்கினார். ஆனால் பிள்ளை பிறந்த பிறகும் இவர் திருமணம் செய்து கொள்ளாமலே இருந்தார்.

என்ன பிரச்சனை என்று விசாரித்ததில் நடிகைக்கும் அவருடைய காதலருக்கும் ஏதோ கருத்து வேறுபாடு என்ற தகவல் கசிந்தது. அதை தொடர்ந்து நடிகை காதலரை பிரிந்து தனியே வாழும் அளவுக்கு வந்தார். இப்படி காதலரை நம்பி தாலி வாங்குவதற்கு முன்பே பிள்ளையை வாங்கி விட்டாரே என நடிகையின் நிலையை பார்த்து பலரும் பரிதாபமாக பேசி வந்தனர்.

ஆனால் நடிகையோ விவரமாக குழந்தைக்கு இனிஷியல் பிரச்சனை வந்து விடக்கூடாது என்று இப்போது புது காதலரை பிடித்து விட்டாராம். சமீபகாலமாக நடிகை தன் புது காதலருடன் ஊர் சுற்றிக் கொண்டிருக்கும் விஷயம் தான் இப்போது பரபரப்பை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

மேலும் இந்த காதலாவது கல்யாணத்தில் முடியுமா அல்லது நடிகை வழக்கம் போல இவரையும் கழட்டி விட்டு விடுவாரா என்று பலரும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். ஆனால் நடிகை இந்த முறை மிஸ் ஆகி விடக்கூடாது என்ற முடிவில் இருக்கிறாராம். அந்த வகையில் எப்போது வேண்டுமானாலும் நடிகையின் கல்யாண அறிவிப்பு வரலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →