லிப் லாக், டேட்டிங் என மன்மதனாகவே வாழ்ந்த நடிகர்.. வரிசையாக காதலிகளை கழட்டி விட இதுதான் காரணம் 

குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான வாரிசு நடிகர் தன்னுடைய துரு துருவான நடிப்பால் பலரையும் கவர்ந்தார். இதனால் அவர் ஹீரோவாகவும் தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார். இவர் தன்னுடன் சேர்ந்து நடிக்கும் ஒரு நடிகைகளை கூட விட்டு வைப்பதில்லை.

லிப் லாக், டேட்டிங் என வரிசையாக நடிகைகளுடன் ஜாலி பண்ண கூடியவர். ஆனால் இவரையும் ஒரு சில நடிகைகள் சின்சியராக காதல் செய்தனர். அப்படிப்பட்ட நடிகைகளிடம் ஒழுங்காக நடந்து கொள்ளாததற்கு பலனாய் தான், 40 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்யாமலேயே ஒண்டிக்கட்டையாய் வாழ்ந்து வருகிறார்.

தற்போது இந்த நடிகருடன்  இருந்த காதலை எதற்காக முறித்துக் கொண்டார் என்பதை அந்த நடிகையை சமீபத்திய பேட்டி ஒன்றில் வெளிப்படுத்தி இருக்கிறார். மில் பியூட்டியாக இருக்கும் அந்த நடிகை மன்மதன் நடிகரை நம்பர் நடிகையின்பிடியில் இருந்து மீட்டு வந்தவர். இவர்கள் இருவரும் நெருங்கி பழகி வந்த சமயத்தில் திருமணம் வரை சென்ற இவர்களது உறவு திடீரென ஒரு நாள் பிரேக்கப் ஆனது.

இதற்கு காரணம் அந்த நடிகரின் ஓவர் துடுக்கு வாய்தானாம். அவரின் நடத்தை சிறுபிள்ளை போலவே இருந்திருக்கிறது, எதையுமே விளையாட்டுத்தனமாகவே எடுத்துக் கொள்ளும் அந்த நடிகர் வாழ்க்கையை குறித்த எந்த புரிதலும் இல்லாமல் குருட்டாம்போக்கில் வாழ்ந்து கொண்டிருந்தார்.

இதையெல்லாம் பார்த்த அந்த மில்க் பியூட்டி இவர் சரிப்பட்டு வர மாட்டார் என பிரபல தொழிலதிபரை சமீபத்தில் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் அந்த நடிகை இப்போது சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகிறார்.

ஆனால் அந்த நடிகரோ இப்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல் ஜாலியாக பேச்சுலர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இவருடைய வாயை குறைத்தால் மட்டுமே சினிமாவிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் ஜெயிக்க முடியும் என்று அந்த நடிகை சமீபத்தில் வேதனையுடன் தன்னுடைய பழைய நினைவுகளை பகிர்ந்து இருக்கிறார்.