கோடிகளை கொட்டும் நிறுவனங்கள்.. பா ரஞ்சித்தை நம்பி படையெடுக்கும் தயாரிப்பாளர்கள்

Pa Ranjith: சமூகம் சார்ந்த படங்களை எடுக்கும் இயக்குனர்கள் தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் சொர்ப்பம் தான். அவர்களை விரல் விட்டு என்னும் அளவுக்கு தான் இருக்கிறார்கள். அந்த வகையில் பா ரஞ்சித், மாரி செல்வராஜ் போன்ற இயக்குனர்கள் சமூக அக்கறை கொண்ட படங்களை எடுத்து வருகிறார்கள்.

இதில் பா ரஞ்சித் இயக்குனராக ஒரு புறம் பிசியாக இருந்தாலும் தயாரிப்பாளராகவும் பட்டையை கிளப்பி வருகிறார். தற்போது விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் தங்கலான் படத்தை பா ரஞ்சித் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்மரமாக நடந்து வரும் நிலையில் இந்த ஆண்டு இறுதி அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தங்கலான் படம் திரையில் வர இருக்கிறது.

இந்நிலையில் தன்னுடன் உதவி இயக்குனராக பணியாற்றிய இயக்குனர்களை தனது நீளம் ப்ரொடக்ஷன் மூலம் இயக்குனராக அறிமுகம் செய்து வருகிறார் பா ரஞ்சித். இவர் மீது நம்பிக்கை வைத்து சிங்கப்பூர் நிறுவனங்கள் முதலீடு செய்து வருகிறார்கள். அந்த பணத்தை வைத்து தான் இப்போது பா ரஞ்சித் படங்களை தயாரித்து வருகிறார்.

அதுவும் நல்ல கதைகளை மட்டும் தான் தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். இந்த சூழலில் சமீபத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய படம் போர் தொழில். சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் சீரியல் கில்லராக வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பு கிடைத்தது.

இப்படம் மினிமம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் வசூலை வாரி குவித்தது. இப்போது பா ரஞ்சித் தயாரிப்பு நிறுவனத்தில் போர் தொழில் தயாரிப்பாளர் முதலீடு செய்ய இருக்கிறாராம். ஆகையால் இன்னும் நல்ல படங்களை அதிகமாக தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தொடர்ந்து பா ரஞ்சித் கொடுக்க இருக்கிறார்.

கண்டிப்பாக இந்த படங்கள் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகம் இல்லை. அடுத்தடுத்து பா ரஞ்சித் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படங்கள் வெளியாக இருக்கிறது. போர் தொழில் படத்தை தொடர்ந்து நிறைய தயாரிப்பாளர்கள் பா ரஞ்சித்தை நோக்கி படையெடுக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →