தொகுப்பாளினியை கடத்த முயன்ற அரசியல்வாதி.. கழுவுற மீனில் நழுவுற மீனாக எஸ்கேப்பான சம்பவம்

சின்னத்திரை தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினி மீது அரசியல் பிரபலம் ஒருவருக்கு ஆசை ஏற்பட்டிருக்கிறது. அவரை எப்படியாவது அடைந்தே தீர வேண்டும் என கங்கனத்துடன் இருந்திருக்கிறார். ஆனால் தொகுப்பாளினி எப்படியும் இவரது வலையில் மாட்டி விடக்கூடாது என எச்சரிக்கையாக இருந்திருக்கிறார்.

ஆனாலும் பெரிய இடத்திலிருந்து தொடர்ந்து தொகுப்பாளினிக்கு குடைச்சல் வந்திருக்கிறது. இந்நிலையில் தொகுப்பாளினியை கடத்த அந்த அரசியல்வாதியின் ஆட்கள் முயற்சித்திருக்கின்றனர். இதை தெரிந்து கொண்ட தொகுப்பாளினி தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்பதால் அந்த அரசியல் கட்சிக்கு எதிராக இருக்கும் அரசியல்வாதியிடம் இது பற்றி கூறியிருக்கிறார்.

அவர் சம்பவ இடத்திற்கே வந்து தொகுப்பாளினியை காப்பாற்றி பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தொகுப்பாளினிக்கு தொந்தரவு கொடுத்த அரசியல் பிரபலத்திற்கு நேரடியாகவே போன் செய்து இனிமேல் அவரை தொந்தரவு செய்யக்கூடாது என எச்சரித்துள்ளார்.

அதன் பிறகு தொகுப்பாளினி இருக்கும் திசை கூட அந்த அரசியல்வாதி வருவதில்லையாம். மேலும் பொதுவாக சின்னத்திரை நடிகைகள் வாய்ப்பு மற்றும் பணத்திற்காக தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுடன் அந்தரங்க உறவு வைத்திருக்கும் செய்தி வெளியாகி இருக்கிறது.

நாளடைவில் இதே பிரச்சனை காரணமாக அந்த நடிகைகள் தற்கொலை செய்து கொள்ளவும் வழி வகுத்து விடுகிறது. ஆனால் இதற்கெல்லாம் கொஞ்சமும் இடம் கொடுக்காத தொகுப்பாளினி தனக்கு ஆஃபர் வந்தும் கழுவுற மீனில் நழுவுற மீனாக தன்னை சாதூர்யமாக காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →