பிரபல நடிகை அறிமுகமான படமே கொஞ்சம் ஏடாகூடமானது தான். அந்த கேரக்டருக்கே அவர் தயாரிப்பாளரை அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் வாய்ப்பை பிடித்தார். ஆனால் அந்த படத்திற்கு பிறகு தரமான கதைகளை தேர்வு செய்து நடித்த நடிகை விரைவிலேயே பிரபலம் ஒருவரை திருமணம் செய்து செட்டில் ஆனார்.
நல்ல குடும்பம், கணவன் என எல்லாம் இருந்தும் கூட அந்த நடிகை தனக்கு கிடைத்த வாழ்க்கையை கையில் வைத்துக் கொள்ளாமல் நழுவ விட்டு விட்டார். இப்போது கணவரை விவாகரத்து செய்துவிட்டு படங்களில் நடித்து வரும் நடிகை ஏகப்பட்ட சர்ச்சையிலும் அடிக்கடி சிக்கிக் கொள்கிறார்.
இப்படி பேரை மொத்தமாக டேமேஜ் செய்து கொண்ட நடிகையின் விவாகரத்துக்கான காரணம் அவருடைய அடாவடியான குணம் தான். அதாவது நடிகை திருமணத்திற்கு பிறகு நடிக்க கூடாது என்ற கண்டிஷனுக்கு சம்மதித்து தான் திருமதி ஆனார்.
அதன் பிறகும் கூட வீட்டில் இருக்க முடியாமல் எப்படியோ தன் கணவரை தொந்தரவு செய்து அனுமதி வாங்கிய நடிகை மீண்டும் நடிக்க வந்தார். அங்கு தான் பிரச்சனை ஆரம்பித்திருக்கிறது. அதாவது நடிகை நடிக்க சென்ற இடத்தில் அந்த பிரபல ஹீரோவின் கண்ட்ரோலில் இருந்திருக்கிறார். இந்த விவகாரம் நடிகையின் குடும்பத்திற்கும், கணவனுக்கும் தெரிய வந்து இருக்கிறது.
எவ்வளவு கண்டித்தும் திருந்தாத இந்த நடிகையை இனிமேல் திருத்தவே முடியாது என்ற முடிவுக்கு கணவரும் வந்திருக்கிறார். அதன் பிறகு தான் விவாகரத்து நடந்திருக்கிறது. இப்படி மனைவியின் நடவடிக்கை கையை மீறி சென்றதால் ஒட்டுமொத்தமாக அவரை தலைமுழுகிய கணவன் இப்போது வேறு ஒரு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.