ஆசை மனைவியால் முடங்கி கிடக்கும் பிரபலம்.. கணவன் கேரியரை காலி செய்த நடிகை

பொதுவாக நடிகைகளுக்கு திருமணமான பிறகு மார்க்கெட் சரிந்து விடும் என்பார்கள். இதனால் தான் டாப் நடிகைகள் பலரும் திருமணத்தை தள்ளி போட்டு வருகிறார்கள். இந்நிலையில் உச்ச நடிகை ஒருவர் அடுத்தடுத்த காதல் தோல்வியால் மிகுந்த மன கஷ்டத்தில் இருந்தார்.

ஒவ்வொரு முறையும் அன்புக்காக ஏங்கி தோற்றுப் போனது தான் மிச்சம். இவ்வாறு நடிகை இனி காதலே வேண்டாம் சினிமா தான் முக்கியம் என முழு வீச்சில் இறங்கிய நிலையில் அதிலும் சாதித்து காட்டிவிட்டார். அப்போது தான் தனக்கு நம்பிக்கையான ஒருவர் நடிகையின் கண்ணில்பட்டார்.

இவரை எப்படியும் விட்டுவிடக்கூடாது என்ற முடிவில் நடிகை சினிமாவில் அதிகம் பிரபலம் இல்லாத அந்த நபரை காதலிக்க தொடங்கினார். இருவருக்கும் செட்டாக விரைவிலேயே திருமணம் செய்து செய்து கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல் ஒரு வருடத்திலேயே குழந்தையும் பிறந்து விட்டது.

ஆனாலும் சினிமாவை விடாத நடிகை கெட்டியாக பிடித்துக் கொண்டு தனது வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். மேலும் தனது கணவனின் கேரியரை நடிகை தான் திட்டம் போட்டு காலி செய்துவிட்டாராம். ஏனென்றால் தன்னுடைய வளர்ச்சிக்கு குழந்தை தடையாக இருக்க கூடாது என்பதால் கணவனின் வளர்ப்பில் விட்டு விட்டார்.

நடிகை சூட்டிங் என்ற ஊரெல்லாம் சுற்றும் நேரத்தில் கணவர் பிள்ளையை பார்த்து வளர்த்து வருகிறாராம். அவருக்கும் சேர்த்து நடிகை பல கோடிகள் சம்பாதித்து வருகிறார். அதனால் பண பிரச்சனை எதுவும் இல்லாததால் கணவரும் தனது லட்சியத்தை விட்டு விட்டு மனைவி சொல்லி மந்திரம் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →