இரவு பந்திக்கு பண்ணை வீடு பரிசாக வாங்கிய நடிகை.. ஓனரை துரத்தி விளக்கு பிடிக்க வைத்த ஹீரோயின்

பொதுவாக சில நடிகைகள் புளியங்கொம்பாக பார்த்து வளைத்து போடுவது நிறைய இடங்களில் அரங்கேறி வருகிறது. அப்படி ஒரு நடிகை செய்திருக்கும் விஷயம் தான் இப்போது அனைவரையும் வாயை பிளக்க வைத்திருக்கிறது. நடிகை கொஞ்சம் வயசு அதிகமானாலும் தாராள வளர்ச்சி காட்டி படங்களில் நடித்து வந்தார்.

ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஓனர் ஒருவர் நடிகையின் மேனேஜரை அணுகி இருக்கிறார். அப்போது அந்த ஓனர் பெரும்புள்ளி என்பதை தெரிந்து கொண்ட நடிகை ஏற்கனவே அவர் திருமணமாகி டைவர்ஸ் செய்த மன வேதனையில் இருக்கிறார் என்பதையும் அறிந்திருக்கிறார். நடிகை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

முதலில் காம்ப்ளக்ஸ் ஓனரின் பேக்ரவுண்டை விசாரித்து கொண்ட நடிகை ஆரம்பத்தில் பிடி கொடுக்காமல் முரண்டு பிடித்து இருக்கிறார். அதன் பிறகு தான் அவருடன் நட்பை அதிகரித்து காதல் வலை வீசினாராம். இது உண்மையான காதல் என்று நினைத்து ஓனர் ஏமாந்திருக்கிறார்.

அதாவது ஓனரின் பண்ணை வீட்டில் இரண்டு முறை தான் இரவு பந்தி நடந்ததாம். கணவன், மனைவியாய் மாறிவிட்டோம் என அந்த பண்ணை வீட்டையும் ஒரு சொகுசு காரையும் பரிசளித்திருக்கிறார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் முதலாளி. இதை ஆசையாய் அனுபவித்துக் கொண்ட நடிகை அதன் பிறகு டாட்டா காண்பித்து விட்டாராம்.

அதன்பின் இரவு வீட்டுக்கே வருவதில்லையாம் நடிகை. பல இளசுகளுடன் கும்மாளம் போட்டிருக்கிறாராம். கடைசியில் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஓனர் பிடித்தது விளக்கு தான். இந்த செய்தி தான் இப்போது கோலிவுட் வட்டாரத்தில் பரவி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.