இப்போதெல்லாம் தங்களுக்கு நடக்கும் அந்தரங்க தொல்லையை பல நடிகைகளும் வெட்ட வெளிச்சமாக்கி வருகின்றனர். ஆனால் வாய்ப்புக்காக இது போன்ற டார்ச்சரை அனுபவிக்கும் பலர் சில நேரங்களில் இதற்கு பலிகடா ஆகின்றனர். அப்படித்தான் வளர்ந்து வரும் நடிகை ஒருவர் டாப் ஹீரோவின் படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.
ஆரம்பத்தில் அவரிடம் நடிகருக்கு அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. வாய்ப்புக்காக நடிகையும் ஓகே என்று சொல்லி இருக்கிறார். ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்த பிறகு அப்படத்தில் நடித்த மற்றொரு முரட்டு நடிகரையும் கவனிக்க வேண்டும் என்று கூறியிருக்கின்றனர்.
இதனால் மிரண்டு போன அந்த நடிகை முடியாது என்று மறுத்திருக்கிறார். ஆனாலும் அவரை கட்டாயப்படுத்தி இருவருக்கும் கம்பெனி கொடுக்க வைத்திருக்கின்றனர். அதுவும் இன்று நான், நாளை நீ என்று இரண்டு ஹீரோக்களும் மாறி மாறி நடிகையை பங்கு போட்டு இருக்கின்றனர்.
இப்படி ஒரு டார்ச்சரால் நொந்து போன அந்த நடிகை எப்போது ஷூட்டிங் முடியும் பொட்டியை கட்டலாம் என்று இலவு காத்த கிளி போல இருந்திருக்கிறார். அதன் பிறகு ஒரு வழியாக படப்பிடிப்பு முடிந்த நிலையில் நடிகைக்கு பேசிய சம்பளத்தை விட அதிக பணம் தயாரிப்பு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டிருக்கிறது.
இதனால் சந்தோஷமான நடிகை ஆள விடுங்கடா என சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகிவிட்டாராம். ஓஹோ இப்படி ஒரு விஷயத்தால் தான் நடிகை ப்ரமோஷனுக்கு கூட வரவில்லையா என்று இப்போது இந்த சங்கதியை கேள்விப்பட்ட பலரும் சத்தம் இல்லாமல் கிசுகிசுத்து வருகின்றனர்.