அந்தரங்க காட்சியில் நடிக்க தயங்கிய நடிகை.. ஒத்திகை பார்க்கும் சாக்கில் எல்லை மீறிய இயக்குனர்

அக்கட தேசத்திலிருந்து வந்து சிறு சிறு கேரக்டர்களில் நடித்து வந்தவர் தான் அந்த நடிகை. ஒருமுறை அவர் பிரபல நடிகர் ஒருவரின் படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். முக்கியமான கதாபாத்திரமாக இருந்தாலும் வில்லனால் பலவந்தப்படுத்தப்படுவது போன்ற ஒரு காட்சியும் இருந்திருக்கிறது.

இதனால் பயந்து போன நடிகை சம்பந்தப்பட்ட அந்த காட்சியில் நடிக்க மிகவும் தயங்கி இருக்கிறார். உடனே இயக்குனர் அவருக்கு சமாதானம் சொல்லி ஒத்திகை பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி தனி அறைக்கு அழைத்துச் சென்று இருக்கிறார்.

ஆனால் அங்கு அவர் காட்சியை பற்றி விளக்காமல் நடிகையிடம் அத்துமீறி இருக்கிறார். இதனால் பதறிப் போன நடிகை அவரிடம் இருந்து விடுபட மிகவும் போராடி இருக்கிறார். ஒரு கட்டத்தில் எப்படியோ அந்த இடத்தில் இருந்து தப்பித்து வந்த நடிகை வீட்டுக்கே ஓடி விட்டாராம்.

இப்படி ஒரு வக்ரபுத்தியுடன் இருக்கும் இயக்குனரின் படத்தில் நடிக்கவே கூடாது என்று முடிவெடுத்த நடிகை மறுநாள் கூட ஷூட்டிங் செல்ல வில்லையாம். அதனாலேயே அப்பட வாய்ப்பு வேறு ஒரு நடிகைக்கு சென்றிருக்கிறது.

அதைத்தொடர்ந்து விரக்தியடைந்த நடிகை சினிமாவும் வேண்டாம் ஒன்றும் வேண்டாம் என்று சொந்த ஊருக்கே பொட்டியை கட்டிக்கொண்டு கிளம்பி விட்டாராம். இப்போது அவர் திருமணம் செய்து கொண்டு இருக்கும் இடமே தெரியாமல் வாழ்ந்து வருகிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →