சூட்டிங்கில் நடிகரை காக்க வைத்து நடிகையுடன் ஜல்சா செய்த இயக்குனர்.. கோபத்தில் மாஸ் ஹீரோ செய்த காரியம்

பிரபல ஹீரோ படம் ஒன்றில் இப்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகை ஒருவர் ஜோடி போட்டு நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் இயக்குனர் மற்றும் நடிகை இருவரும் காதலித்து டேட்டிங் செய்து வந்திருக்கின்றனர். அதுவும் படப்பிடிப்பிலேயே இருவரும் இடைவெளியில் எல்லை மீறி இருக்கின்றனர்.

சில சமயங்களில் படப்பிடிப்புக்கு தாமதமாகவும் இயக்குனர் வந்திருக்கிறார். ஆனால் மாஸ் ஹீரோவோ பஞ்சுவாலிடிக்கு பேர் போனவர். காலை 9 மணிக்கு படப்பிடிப்பு தொடங்குகிறது என்றால் செட்டில் ஏழரை மணிக்கு வந்து விடுவார். அதுவும் ஒவ்வொரு நாளும் தவறாமல் இதை பின்பற்றி வருகிறார்.

சினிமாவில் மாஸ் ஹீரோ என்ற அந்தஸ்து இருந்தாலும் இதை இத்தனை வருடங்களாக பின்பற்றி வருகிறார் ஹீரோ. ஆனால் அவரது நேரத்தை வீணடித்து இயக்குனர் நடிகையுடன் ஜல்சா செய்து கொண்டிருக்கும் விஷயம் ஹீரோவின் காதுக்கு சென்று விட்டது. இதனால் உடனே பேக்கப் சொல்லிவிட்டு கிளம்பி விட்டாராம்.

அதன் பிறகு இயக்குனர் போன் செய்தும் ஹீரோ எடுக்கவில்லை. வேறு வழி இல்லாமல் நேரடியாகவே வீட்டுக்கு சென்று நடிகரின் காலில் விழுந்து நானும் நடிகையும் காதலித்து வருகிறோம், அதனால் தான் இப்படி நடந்து விட்டது. இனிமேல் கவனமாக இருக்கிறேன் தயவுசெய்து நடிக்க வாருங்கள் என கெஞ்சி கேட்டிருக்கிறார்.

நீங்க என்னமோ பண்ணிட்டு போங்க, ஆனா என் படம் ஒழுங்கா வரணும், என்னோட நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று கட்டன் ரைட்டாக சொல்லிவிட்டாராம். கடைசியில் நடிகையும் இயக்குனரை கழட்டிவிட்ட நிலையில் படமும் படுமோசமாக ஊத்திக்கொண்டது. இதற்கெல்லாம் காரணம் இயக்குனர் தான் என மாஸ் ஹீரோ தற்போது வரை அவருடன் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளவில்லையாம்.