நிச்சயத்திற்கு பின் காதலரின் மீது சந்தேகப்பட்டு கழட்டி விட்ட நடிகை.. அடுத்த இனிஷியலுக்காக மாட்டிய ஹீரோ

இளசுகளை தன்னுடைய சிரிப்பாலேயே சிறைப்பிடித்து வைத்திருந்த நடிகை, சுமார் பத்து வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக டாப் நடிகர்களுடன் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார். இவருக்கு பிளஸ் பாயிண்ட் அவருடைய ஹோம் லுக் தான்.

இளைஞர்கள் பலரும் எனக்கு இந்த மாதிரி பொண்ணு வேண்டும் என இந்த நடிகை கை நீட்டுவார்கள். அந்த அளவிற்கு குடும்ப குத்து விளக்காக இருந்த இந்த நடிகை, லட்டு போல் இருந்த ஒரு ஹீரோவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த ஹீரோவுக்கு முன்பே பிரபல தயாரிப்பாளரும் அந்த ஹோம்லி நடிகையும் உருக உருக காதலித்திருக்கின்றனர்.

மீட்டிங், டேட்டிங் என எல்லை மீறி தொடர்ந்த இவருடைய உறவை பார்த்த குடும்பத்தினர், இவர்கள் இருவருக்கும் திருமணத்திற்கான நிச்சயதார்த்தத்தையும் நடத்தினர். இருவரும் வைர மோதிரம் எல்லாம் மாற்றி பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.

ஆனால் நிச்சயதார்த்தத்திற்கு பின்னர் காதலனின் மீது அந்த நடிகைக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் தனக்கு உண்மையாக இல்லை என குடும்பத்தினரிடம் தெரிவித்து உடனே திருமணத்தையும் நிறுத்திவிட்டார். அந்த தயாரிப்பாளர் உடனான காதலை முறித்துக் கொண்ட ஹோம்லி நடிகை, அதன் பின் திருமணமே வேண்டாம் என்று இருந்தார்.

பின்பு ஒரே வயதுடைய ஹீரோவின் மீது காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இன்று வரை கோலிவுட்டின் நட்சத்திர தம்பதியர்களாக ஜொலிக்கும் அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கிறது. ஆனால் ஹோம்லி நடிகை இந்த ஹீரோவுக்கு முன்பு தயாரிப்பாளரை காதலித்து திருமணம் வரை சென்ற விஷயம் இப்போது அவர்களுடைய ரசிகர்களுக்கு தெரியவந்து ஷாக் கொடுத்துள்ளது.