பெரிய குடும்பத்து வாரிசுடன் இருந்த காதல்.. மார்க்கெட்டை காலி செய்து விரட்டி விட்ட சம்பவம்

என்றும் இளமையாக இருக்கும் நடிகையின் வாழ்வில் சில காதலர்கள் இருந்தாலும் பெரிய குடும்பத்து வாரிசை தான் அவர் உருகி உருகி காதலித்தார். அவரையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற முடிவிலும் இருந்தார்.

ஆனால் திடீரென இந்த ஜோடி பிரேக்கப் செய்து பிரிந்தது மட்டுமல்லாமல் அந்த காதலர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதைத்தொடர்ந்து நடிகை இப்போது நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்.

உண்மையில் இந்த காதல் பிரிந்ததற்கு காரணமே நடிகரின் குடும்பம் பெரிய அந்தஸ்துடன் இருந்தது தான். அக்கட தேசத்தில் பிரபலமாக இருக்கும் அந்த குடும்பத்தில் நடிகைகளை எல்லாம் மருமகளாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அதனாலேயே திட்டம் போட்டு இந்த ஜோடியை அவர்கள் பிரித்து விட்டு இருக்கின்றனர்.

அது மட்டுமல்லாமல் நடிகை இங்கிருந்தால் ஏதாவது தகராறு செய்வார் என்று நினைத்து அவருக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகளையும் கெடுத்து விட்டிருக்கின்றனர். இதனால் மார்க்கெட் இழந்த நடிகை சொந்த மொழியிலேயே கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

ஆனால் இங்கும் போட்டி நடிகையின் அட்டகாசம் அதிகமாக இருந்த சூழலில் தட்டு தடுமாறி வந்த நடிகை இப்போதுதான் ஸ்டடியாகி இருக்கிறார். தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் அம்மணி திருமணம் என்பதை பற்றி கூட யோசிக்காமல் பிஸியாகி இருக்கிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →