3 நடிகைகளை வளைத்து போட்ட ஹீரோ.. கடைசியில் தனிமையில் வாடும் சோகம்

பெரிய பட்ஜெட் படங்களை இயக்கும் இயக்குனரின் படத்தில் அறிமுகம் ஆன ஹீரோ ஒருவர் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருந்தார். அவரது அழகில் மயங்காத பெண்களே கிடையாது என்ற அளவுக்கு ஹீரோவை சுற்றி எப்போதுமே பெண்கள் கூட்டம் வட்டமிட்டு கொண்டு இருந்தது. இதை நடிகரும் சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்.

அந்த வகையில் முதலில் தன்னுடன் ஜோடி போட்டு நடித்த நடிகையுடன் பழகி வந்தார். சில காலம் இருவரும் டேட்டிங் செய்து வந்த நிலையில் அதன் பிறகு பிரிந்து விட்டனர். இதைத்தொடர்ந்து முன்னணி நடிகையாக இருந்த ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் நடிகர் இருந்தார். அதன் பிறகு இவர்களுக்குள் சண்டை முட்டிக்கொள்ள இணையத்தில் ஒருவருக்கொருவர் திட்டிக் கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நடிகைக்கு திருமணம் ஆன பிறகும் ஹீரோ சும்மா இருந்த பாடில்லை. ஏதாவது வம்பிழுக்கும் படியாக தொடர்ந்து கமெண்ட் செய்து கடுப்பேற்றி வந்தார். இப்படி இரண்டு நடிகைகள் நடிகையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரிந்து விட்டனர். கடைசியாக ஹீரோவின் லிஸ்டில் இணைந்தவர் தான் வாரிசு நடிகை.

பல திறமைகளை உள்ளடக்கிய நடிகை தெரியாத்தனமாக ஹீரோவை நம்பி மோசம் போய்விட்டார். அதாவது இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வந்தனர். ஆனால் ஹீரோவின் வாய் சும்மா இருக்குமா சில வருடங்களிலேயே இருவருமே இரு துருவங்களாக பிரிந்து விட்டனர்.

போதாக்குறைக்கு ஹீரோ வேறு ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதுவும் விவாகரத்தில் முடிந்து விட்டது. இவ்வாறு ஹிரோவின் வாழ்க்கையே சர்ச்சையாக இருந்தது. இவரின் வாழ்க்கையில் இத்தனை பெண்கள் வந்து சென்ற நிலையில் இப்போது தனிமையில் தான் இருந்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →