பொதுவாக நடிகைகள் சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் யோசிக்காமல் இறங்கி விடுகிறார்கள். ஒரே படத்தில் நடித்த இரண்டு நடிகைகள் படம் தயாரிப்பில் இறங்கினால் குறுகிய காலத்திலேயே சொத்து சேர்த்து விடலாம் என்று ஆசை பட்டிருக்கின்றனர். இதனால் மிகப்பெரிய பைனான்சியரிடம் பெரிய தொகையை வாங்கி இருந்தனர்.
அதுவும் படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் அதிக வட்டிக்கு பணத்தை வாங்கி இருக்கின்றனர். ஆனால் இரண்டு நடிகைகளும் நினைத்தது போல் படம் இல்லாமல் படு பிளாப் ஆகிவிட்டது. இதனால் பணத்தை குறிப்பிட்ட நேரத்தில் கொடுக்க முடியாமல் வட்டி, நிலுவை என ஒரு பெரிய தொகையில் நடிகைகள் மாட்டிக்கொண்டனர்.
குறிப்பிட்ட நேரம் வரை சாக்குபோக்கு சொல்லி வந்த இவர்கள் அதன் பிறகு பைனான்சியரால் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதை அடுத்து ஒரு நடிகை தன்னிடம் தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோரிடம் பணத்தை வாங்கி பைனான்சியரின் கணக்கு வழக்கை முடித்துவிட்டார்.
ஆனால் மற்றொரு நடிகையோ வேறு வழி இல்லாத காரணத்தினால் பைனான்சியரை அட்ஜஸ்ட்மென்ட் செய்தே கடனை அடைத்திருக்கிறார். இதனால் கிட்டத்தட்ட பல வருடங்களாக நடிகை பைனான்சியர் கட்டுப்பாட்டில் தான் இருந்தார். அதன் பிறகு கணக்கு ஒரு வழியாக முடிய தப்பித்தோம் பிழைத்தோம் என நடிகை ஓடி விட்டார்.
அதன் பிறகு இந்த இரு நடிகைகளும் ஜாக்கிரதையாக ஒவ்வொரு விஷயத்தையும் கையாள ஆரம்பித்தனர். படத்தில் வரும் சம்பாத்தியமே போதும் என்ற நிலைமைக்கு வந்துவிட்டனர். ஒரு காலகட்டத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளுக்கா இந்த நிலைமை என்று பலரையும் அந்த சம்பவம் யோசிக்க வைத்தது.