பதவி ஆசையில் வாரிசு நடிகையை கல்யாணம் பண்ண 60 வயது நடிகர்.. மனநிலை பாதிக்கப்பட்ட பரிதாபம்
Gossip News: நடிகைகளில் ஒரு சிலர் தான் நடிக்கும் பொழுது அவருடைய கண்களே மொத்த உணர்ச்சிகளையும் சொல்லிவிடும். அப்படிப்பட்ட கண்களுக்கு சொந்தக்காரியாக இருந்த நடிகையை மூத்த நடிகர் ஒருவர் சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டு மொத்தமாக கழட்டி விட்டிருக்கிறார். ஒரு காலத்தில் ரசிகர்கள் கொண்டாடிய அந்த நடிகை இன்று வரை திருமணம் செய்யாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். சினிமா மற்றும் அரசியலில் இருக்கும் நிறைய பேர் அதிகமாக மூட நம்பிக்கைகள் கொண்டவர்களாக இருப்பார்கள். உடனே முன்னுக்கு வந்து விட வேண்டும், உடனே பதவி கிடைத்து விட வேண்டும் என ஏதாவது ஒரு சாமியாரை பிடித்து வைத்துக் கொண்டு, அவர் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டு இருப்பவர்கள் நிறைய பேர். அப்படித்தான் இந்த அக்கட தேசத்து ஹீரோவும் இருந்திருக்கிறார். சினிமாவில் ஒரு கால் அரசியலில் ஒரு கால் என வைத்துக்கொண்டு இரண்டிலுமே முதல் இடத்தில் இருக்க வேண்டும் என அந்த நடிகர் ஆசைப்பட்டிருக்கிறார். இதற்காக மாயம் மற்றும் மாந்திரீகத்தை ரொம்பவும் நம்பி இருக்கிறார். பதவி ஆசையில் நரபலி வரைக்கும் சென்றதாக கூட செய்திகள் வெளியாகி இருக்கிறது.
