புளியங்கொம்பை பார்த்தவுடன் சின்ன ஹீரோவை கழட்டிவிட்ட பிரபலம்.. சாபத்தால் பிரிந்த குடும்பம்

அக்கட தேசத்தில் இருந்து வந்த ஹீரோ ஒருவர், அதே ஊரிலிருந்து வந்த பிரபலம் ஒருவருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்தார். அந்த பிரபலத்தின் தந்தை பெரிய இடம் தான். மேலும் ஹீரோ அப்போது தான் சினிமாவில் சில வாய்ப்புகள் வந்ததால் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

ஆனால் திடீரென பிரபலம் நடிகர் இப்போதைக்கு பெரிய நிலைமைக்கு வரமாட்டார் என்று புரிந்து கொண்டுள்ளார். இதனால் அப்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பிரபல ஹீரோவை தன் வலையில் விழ வைத்து திருமணம் செய்து கொண்டார்.

அப்போது அந்தச் சின்ன ஹீரோ மிகுந்த மனம் வருத்தத்தில் மாஸ் ஹீரோவிடம் சென்று முறையிட்டு இருக்கிறார். ஆனால் பெரிய ஹீரோ தனது செல்வாக்கை வைத்து இவரை ஒன்னும் இல்லாமல் ஆக்கிவிட்டார். அவர்விட்ட சாபம் தான் போல இப்போது இந்த குடும்பம் பிரித்துவிட்டது.

செல்வாக்கு மற்றும் புகழுக்கு ஆசைப்பட்டு பெரிய ஹீரோ என்று பிரபலம் திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில வருடங்கள் மனைவி பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அவர் நடிகை ஒருவரின் வலையில் விழுந்து விட்டார். ஏற்கனவே மனைவி அவருடன் நடிக்க கூடாது என கண்டிஷன் போட்டார்.

இந்த பேச்சை கேட்காமல் தொடர்ந்து நடிகையுடன் நடித்தது மட்டுமின்றி இல்லாமல் ரிலேஷன்ஷிப்பும் வைத்திருந்தார். இதனால் மனைவி கோபித்துக் கொண்டு பொட்டியை கட்டிவிட்டார். மேலும் இவர் செய்த பாவம் தான் இப்போது குடும்பம் பிரிய காரணம் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →