அடுத்தடுத்து காதல் தோல்வி.. 50 வயதாகியும் சிங்கிளாக இருக்கும் நடிகை

நடிகை அக்கட தேசத்தில் இருந்து வந்த நிலையில் டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். பெங்களூர் தக்காளி போல் இருக்கும் இவருக்கு அப்போது மவுசு அதிகமாக இருந்தது. இந்நிலையில் தன்னுடன் நடித்த சக நடிகர் ஒருவருடன் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் நடிகை இருந்திருக்கிறார்.

ஆனால் அந்த ஹீரோ ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பது நடிகைக்கு தெரியும். இருந்த போதும் ஹீரோ மீது இருந்த காதலால் தன்னை திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்த்தார். ஆனால் கடைசியில் நடிகையை ஹீரோ கழட்டிவிட்டு விட்டார். இதனால் நடிகை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்.

இதை அடுத்து சில காலம் படங்களில் நடிக்காமல் நடிகை இருந்தார். இதை அடுத்து சினிமாதுறை இல்லாமல் மிகவும் பிரபலமான ஒருவருடன் காதல் வலையில் விழுந்தார். அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள உள்ளனர் என்று செய்திகள் வெளியானது.

ஆனால் கடைசியில் நடிகையின் இந்த காதலும் தோல்வியில் முடிந்து விட்டது. ஆகையால் திருமணமே வேண்டாம் என்று 50 வயதாகியும் நடிகை சிங்கிளாகவே சுற்றி வருகிறார். மேலும் பல வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை இப்போது ரி என்ட்ரி கொடுத்து ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் பொது வாழ்க்கை, அரசியல் வாழ்க்கை ஆகியவற்றில் தனது நேரத்தை செலவிட்டு வருகிறார். திருமணத்தைப் பற்றி நடிகை இடம் கேள்வி கேட்கும் போதெல்லாம் தனக்கு அதில் சுத்தமாக விருப்பம் இல்லை என்று கூறி வருகிறார். இதற்கெல்லாம் காரணம் காதல் தோல்வியால் திருமணத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பு தான்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →