சினிமா செய்திகள்

பசுந்தோல் போத்திய புலி.. மாற்றுத்திறனாளி நடிகையையும் விட்டு வைக்காத இயக்குனர்

By Arun · 25 ஜன 2024 · Updated 07 மார்ச் 2026
gossips

பசுந்தோள் போத்திய புலி என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். இந்த இயக்குனர் இப்படிப்பட்டவரா என எல்லோருக்கும் வியப்புத் தரும் விதமாக சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதாவது இயக்குனரின் படத்தை எடுத்துக் கொண்டால் சமூகத்திற்கும், இளைய தலைமுறையினருக்கும் நல்ல கருத்து சொல்லும் படியாக தான் படம் எடுத்து வருகிறார்.

அதேபோல் வெளியுலகத்தில் பேசும் போதும் இப்படி ஒரு மனிதரா என ஆச்சரியப்படும் விதமாகத்தான் இருக்கும். ஆனால் அவருடைய நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்து பார்த்தால் தான் தெரிகிறது இயக்குனர் எவ்வளவு மோசமானவர் என்று. அதாவது தன்னுடைய படத்தில் நடித்த கதாநாயகியை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்லி கேட்டிருக்கிறார்.

உடனே நடிகை அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார். படத்தில் பாதி காட்சிகள் எடுத்த பின்பும் தன்னுடன் அட்ஜஸ்மென்ட் செய்ய மறுத்த காரணத்தினால் அந்த நடிகையை படத்தில் இருந்து தூக்கி விட்டாராம். இதனால் தயாரிப்பாளருக்கு ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இதெல்லாம் பரவாயில்லை மாற்றுத்திறனாளி நடிகையை கூட இயக்குனர் விட்டு வைக்கவில்லையாம்.

நடிகைக்கு குறைபாடு இருந்தாலும் நடிப்பு திறமையில் அவரை அடிச்சுக்க ஆளே கிடையாது. இந்த சூழலில் இயக்குனர் நடிகைக்கு வாய்ப்பு தருவதாக தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தார். மேலும் அந்த நடிகையை கட்டாயப்படுத்தி தன்னுடன் அட்ஜஸ்மென்ட் செய்ய வைத்து விட்டார்.

அதோடு மட்டுமல்லாமல் அடுத்த இரண்டு படங்களிலும் அதே நடிகைக்கு வாய்ப்பு தந்து தன்னுடன் வைத்துக் கொண்டார். மேலும் நடிகைக்கு அடுத்தடுத்த படங்களில் ஏன் இயக்குனர் வாய்ப்பு கொடுத்தார் என்பது அதன் பிறகு தான் அவரை சுற்றி உள்ளவர்களுக்கு தெரிய வந்துள்ளது.