Bayilvan Ranganathan : மார்பகத்தை பெரிதாக்க நினைத்து விபரீதத்தை சந்தித்த நடிகை.. பயில்வான் கூறிய அதிர்ச்சி தகவல்

பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய யூடியூப் சேனல் ஒன்றில் நடிகையை பற்றிய கூறிய விஷயம் தான் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பொதுவாக நடிகைகள் தங்களுடைய உடம்பில் உள்ள சில பாகங்களை அறுவை சிகிச்சை செய்த விஷயத்தை கேட்டிருக்கிறோம்.

நடிகை ஸ்ரீதேவி கூட தனது மூக்கை அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக செய்திகள் வெளியானது. அதேபோல் பிக் பாஸ் நடிகை ரைசா தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்த நிலையில் வேறு விதமான பிரச்சனையை சந்தித்திருந்தார்.

அதேபோல் தான் பல மொழிகளில் பிரபலமடைந்த தீபா தனது மார்பகத்தை பெரிதாக காட்ட வேண்டும் என்பதற்காக ஊக்க மருந்து உட்கொண்டதாக பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். நடிகை தீபா ரஜினியின் ஜானி படத்தில் நடித்திருந்தார்.

முந்தானை முடிச்சு படத்தில் நடித்த டீச்சர்

பாக்யராஜ் நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு படத்தில் டீச்சராக நடித்திருப்பார். பெரும்பாலும் தீபா கவர்ச்சி கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். தற்போது 62 வயதாகும் தீபாவை பற்றி தான் பயில்வான் பேசி சர்ச்சை கிளப்பி இருக்கிறார்.

அதாவது தீபா சினிமாவுக்கு வந்த புதிதில் அவரது மார்பகங்கள் பெரிதாக எடுப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக ஊக்க மருந்து எடுத்துக் கொண்டதாக குறிப்பிடுகிறார். அதனால் ஏற்பட்ட விளைவின் காரணமாக பல இடங்களில் வீக்கம் ஏற்பட்டுவிட்டது.

அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்றினார் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார். இவர் சொன்னது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. இந்த விஷயத்தை கேட்டு பலரும் ஆச்சரியமடைந்து தான் இருக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →