சனிக்கிழமை, அக்டோபர் 19, 2024

Sirakadikkum Asai: முத்துவிடம் மட்டும் ஓவராக ஜம்பம் பண்ணும் மீனா.. ரோகிணிக்கு அடிமையாக இருக்கும் விஜயாவின் மருமகள்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ரோகிணி பொய்க்கு மேல் பொய் சொல்லி பித்தலாட்டம் பண்ணி முத்துவின் குடும்பத்தை ஏமாற்றி வருகிறார். இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாததால் ரோகிணி ஓவராக ஆட்டம் ஆடுகிறார். அது மட்டுமில்லாமல் ஜீவாவிடம் இருந்து வாங்கிய 30 லட்சத்தையும் ஆட்டையை போட்டு விட்டார்.

ஆனால் அதை என் அப்பா கொடுத்திருக்கிறார் என்று குடும்பத்தில் இருப்பவர்களை ஏமாற்றி மனோஜ்க்கு ஒரு பிசினஸ் பண்ணுவதற்கு முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்கும் ஷோரும் ஒன்று விற்பனைக்கு இருக்கிறது என்பது முத்து மூலம் ரோகிணி மற்றும் மனோஜ்க்கு தெரிய வருகிறது.

மீனா தலையில் மிளகாய் அரைக்கும் ரோகினி

இதனை அடுத்து இந்த கடையை வாங்குவதற்கு ரோகிணி பிளான் பண்ணிவிட்டார். ஆனால் இதற்கும் முத்துக்கும் சம்பந்தம் இருக்கக் கூடாது என்பதற்காக முத்துவை கூப்பிடாமலேயே பணத்தை கொடுத்து கடையை வாங்கிவிடலாம் என்று நினைக்கிறார். இதற்கிடையில் இந்த கடைக்கு அம்மா பெயர் தான் வைக்க வேண்டும் என்று முத்து மனோஜை பிளாக்மெயில் பண்ணி விட்டார்.

இதனை தொடர்ந்து ரோகிணி கொஞ்சம் கெத்து காட்டி வருகிறார். முக்கியமாக முத்து மற்றும் மீனாவை மதிக்கவே இல்லை. அதிலும் விஜயா, மீனாவிடம் ரோகினிக்கு என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்டு சமைக்க வேண்டும் என்று ஆர்டர் போட்டிருக்கிறார். இதை கேட்ட மீனா கொஞ்சம் கூட சூடு சொரணை இல்லாமல் ரோகிணியிடம் உங்களுக்கு என்ன சாப்பாடு வேண்டும் என கேட்கிறார்.

அதற்கு ரோகிணி எனக்கு காய்கறி எல்லாம் போட்டு பிரியாணி வேண்டும் என சொல்கிறார். உடனே மீனா, முத்துவை காய்கறி எதுவும் வீட்டில் இல்லை நீங்கள் வாங்கிட்டு வாருங்கள் என்று சொல்கிறார். அப்பொழுது முத்து நான் ஏன் வாங்க வேண்டும். பொண்டாட்டிக்கு வேண்டுமென்றால் மனோஜ் போய் வாங்கட்டும் என்று மனோஜை காய்கறி வாங்குவதற்கு அனுப்பி விடுகிறார்.

இந்த மீனா எப்ப தான் திருந்தப் போகிறாரோ தெரியவில்லை. தான் மட்டும் அடிமையாக இல்லாமல் முத்துவையும் கொஞ்சம் கூட மதிக்காமல் ஓவராக ஜம்பம் பண்ணி வருகிறார். அதாவது ஒருமுறை விஜயா மற்றும் ரோகினிடம் உங்களுக்கு தேவையானதை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டால் அத்துடன் அடங்கி விடுவார்கள்.

ஆனால் மீனா என்னமோ நான் தான் தியாகிச் செம்மல் மாதிரி எல்லா வேலையும் இழுத்து போட்டு அந்த வீட்டில் ஒரு வேலைக்காரியாக பணிவிடை பண்ணி வருகிறார். இதனால்தான் முத்துவிற்கும் அந்த வீட்டில் மதிப்பில்லாமல் போகிறது. இதில் வேற இவர்களுடைய கல்யாண நாளை முத்து மறந்து விட்டார் என்று மீனா சண்டை போடுகிறார்.

முதலில் கணவருக்கு ஏற்ற மாதிரி கெத்தாக இருக்கும் மனைவியாக மீனா மாறிட்டால் அதுவே முத்துவிற்கு கிடைக்கும் வெற்றி தான். ஆனால் அது தெரியாமல் ஓவராக சீன் போட்டு ரோகினிக்கு அடிமையாக வேலை பார்த்து வருகிறார். இதனை தொடர்ந்து முத்துவின் பாட்டி சர்ப்ரைஸ் ஆக வீட்டிற்கு வருகிறார். இவர் வந்த பிறகுதான் மீனாவிற்கு கொஞ்சம் ரெஸ்ட் கிடைக்கும், வேலையும் கம்மியாகும்.

பின்பு இந்த பாட்டியிடம் மீனா, முத்துக்கும் விஜயாவிற்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சினைகள் அனைத்தையும் கேட்டு தெரிந்து கொள்வார். ஒருவேளை அதன் பிறகு அந்த பிரச்சினைகளை சரி செய்ய மீனா முயற்சி எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -spot_img

Trending News