ரஜினி பட கதையை சுட்ட சிங்க பெண்ணே சீரியல்.. யப்பா! உருட்டுறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியல் கதை நாளுக்கு நாள் புளிச்ச மாவாகி கொண்டு இருக்கிறது. எதையும் சூட்டோடு சூடாக நடத்தி முடித்தால் தான் பார்ப்பவர்கள் சுவாரஸ்யம் வரும். கிராமத்திலிருந்து நகரத்துக்கு வரும் பெண் சந்திக்கும் பிரச்சனைகளைப் பற்றிய கதை இது.

தேவையில்லாமல் முக்கோண காதலை கொண்டு வந்து இப்போ அதையே கான்செப்ட் ஆகிவிட்டார்கள். போதாத குறைக்கு இப்ப ரஜினி பட கதையை சுட்டு கொண்டு இருக்கிறார்கள். பணக்கார முதலாளி அவருக்கு தன்னிடம் வேலை செய்யும் பணிப்பெண் மீது காதல்.

அதே நேரத்தில் அதே இடத்தில் வேலை செய்யும் பணியாளருக்கும் அந்த பெண் மீது காதல். இதனால் முதலாளிக்கும், நட்பாக பழகி வந்த அந்தப் பணியாளருக்கும் இடையே சண்டை ஏற்பட போகிறது. இந்த கதையை எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கும்.

சூப்பர் ஸ்டார் ரஜினி கணேசன் நடித்த முத்து படத்தின் கதை தான் இது.அதையே தான் இப்போது சிங்க பெண்ணில் கொண்டு வந்திருக்கிறார்கள். மகேஷுக்கு ஆனந்தி மீது காதல், ஆனந்திக்கு அழகன் மீது காதல், அழகனாய் நடித்துக் கொண்டிருக்கும் அன்புவுக்கு உண்மையை சொல்லி ஆனந்தியை கல்யாணம் பண்ண வேண்டும் என்ற ஆசை.

உருட்டுறதுக்கும் ஒரு அளவு வேண்டாமா

நந்தா விஷயத்தில் மித்ராவை அன்பு மகேஷிடம் போட்டுக் கொடுத்ததால் அவள் தற்போது அன்பு மீது பயங்கர காண்டில் இருக்கிறாள். சந்தர்ப்பம் பார்த்து காத்துக் கொண்டிருக்கும் மித்ரா ஆனந்தி மற்றும் அன்பு நெருங்கி பழகுவதை சாதகமாக பயன்படுத்த இருக்கிறாள்.

தான் உருகி உருகி காதலிக்கும் பெண்ணை அன்பு காதலிக்கிறான் என தெரிந்ததும் கண்டிப்பாக மகேஷ் விஸ்வரூபம் எடுக்கப் போகிறான். வழக்கம் போல ஆனந்தி வேடிக்கை பார்த்துக்கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டு இருக்கப் போகிறாள்.

எந்த நேரத்தில் ஆனந்திக்கு சிங்க பெண்ணே என்ற பெயர் வைத்தார்களோ, இதுவரை எந்த ஒரு விஷயத்தையும் அந்தப் பெண் தைரியமாக செய்ததாய் தெரியவில்லை. இந்த முக்கோண காதல் கதையை . வைத்து முடித்துவிட்டு, சிங்கப்பெண்ணே டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி ஆனந்தியை தைரியமாக காட்ட ஆரம்பித்தால் தான் இனி இந்த கதை தேறும்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -