முத்து செய்த அலப்பறையில் மாட்டிய விஜயா மனோஜ்.. அந்தர்பல்டி அடித்த ரோகினி, சிக்கப் போகும் கல்யாணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், முத்துவிற்கு மீனாவின் நகை எப்படி கவரிங் நகையாக மாறியது அது யாரால் மாற்றப்பட்டது என்பது நன்றாக தெரிந்து விட்டது. ஆனால் அதற்கு ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்பதால் மனோஜ் வாயாலேயே உண்மையை வர வைக்க முயற்சி எடுத்தார். அப்படி உண்மையை மனோஜ் சொல்ல வரும்பொழுது அதை தடுக்கும் பொருட்டாக விஜயா உள்ளே நுழைந்து ஆட்டத்தை கலைத்து விட்டார்.

இதனால் முத்துவிற்கு இன்னும் சந்தேகம் உறுதியாகிவிட்டது. அந்த வகையில் மனோஜ்க்கு உடந்தையாக இருந்து அனைத்து திருட்டு வேலையும் பார்த்தது அம்மா என்பதையும் புரிந்து கொண்டார். ஆனால் இவர்களிடம் இருந்து உண்மையை எப்படி வாங்குவது என்று தெரியாமல் இருந்த நிலையில் மீனா கொடுத்த ஒரு ஐடியா மூலம் முத்து புது அவதாரத்துடன் வீட்டிற்கு நுழைகிறார்.

முத்து விரித்த வலையில் சிக்கிய விஜயா மனோஜ்

அந்த வகையில் நெற்றி நிறைய திருநீர் பட்டையை போட்டுட்டு, கையில் ஒரு மாந்திரீகத்தின் மூலம் மந்திரிச்ச எலுமிச்சை பழத்தை கொண்டு வந்து வீட்டில் இருப்பவர்களை கூப்பிடுகிறார். அவர்கள் முன்னாடி முத்து, அண்ணாமலையிடம் அப்பா இந்த எலுமிச்சை பழத்தை வீட்டில் பூஜை ரூமில் வைத்து பூஜை செய்து வந்தால் மீனாவின் நகை எப்படி கவரிங் நகை மாறியது என்பதை கண்டுபிடித்து விடலாம் என்று சொல்கிறார்.

அது எப்படி என்றால் நகையை எடுத்து கவரிங் நகையை மாற்றி வைத்தவர்கள் வாய் கோணிக்கிட்டு போய் கோணவாயாக மாறிவிடும். அத்துடன் வாயும் பேச முடியாமல் போய்விடும் என்று முத்து சொல்கிறார். உடனே விஜயா அதை எப்படியாவது வைக்க விடாமல் தடுக்க வேண்டும் என்று முயற்சி எடுக்கிறார். ஆனால் முத்து, விஜயா சொல்வதையும் தாண்டி பூஜை ரூமில் எலுமிச்சம் பழத்தை வைத்து விடுகிறார்.

இதனால் மனோஜ் மற்றும் விஜயாவிற்கு ஒரு பக்கம் பயம் இருந்தாலும் என்ன பண்ணுவது என்று தெரியாமல் முழித்து வருகிறார்கள். இன்னும் அதிகமாக மனோஜ் பயம் காட்டும் விதமாக முத்து இரவு நேரத்தில் எலுமிச்சை பழத்தை வைத்து மனோஜ்க்கு ஒரு விளையாட்டு காட்டுகிறார். அதன் மூலம் மனோஜ் பயந்து விஜயாவிடம் இந்த எலுமிச்சை பழத்தை எடுத்து வேறு எங்கேயாவது தூக்கி எறிந்து விட்டால் நாம் நிம்மதியாக இருக்கலாம் என்று ஐடியா கொடுக்கிறார்.

அதன்படி விஜயாவும் பயந்து போய் அந்த எலுமிச்சம் பழத்தை தூக்கி தூரப் போடுவதற்கு கையில் எடுத்து விடுகிறார். அப்படி விஜயா மற்றும் மனோஜ் எடுத்துட்டு வரும்பொழுது முத்து லைட்டை போட்டு அனைவருக்கும் மனோஜ் விஜயா செய்த பித்தலாட்டங்களை வெட்ட வெளிச்சமாக ஆகிவிடுகிறார். இவர்களை வீட்டில் இருப்பவர்கள் கையும் களவுமாக பிடித்து அதிர்ச்சியாக நிற்கிறார்கள்.

ஆனால் கண்டுபிடித்த கையோடு முத்து, விஜயா மற்றும் மனோஜை திட்டிக்கொண்டு இருக்கும் பொழுது ரோகினி உள்ளே புகுந்து மனோஜை காப்பாற்ற பிளான் பண்ணுகிறார். ஆனால் முத்து, ரோகிணி வாயை அடைக்க அவங்க அப்பா கொடுத்த பணத்தை பற்றி பேச ஆரம்பிக்கிறார். அப்பொழுது ரோகினி, சைலன்டாக இருந்தால் தான் நல்லது இல்லை என்றால் இன்னும் எல்லா விஷயங்களும் முத்து கிளறி விடுவார்.

அப்படி என்றால் நம் மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தினால் ரோகினி வாயை மூடிக்கொண்டு அந்தர் பல்டி அடித்து விடுகிறார். இதனை தொடர்ந்து முத்துவுக்கு சந்தேகம் வரப்போகிறது. அந்த வகையில் அடுத்த பாயாசம் ரோகிணிக்கு தான் என்பதற்கு ஏற்ப முத்து சில உண்மைகளை கண்டறிய போகிறார். அதனால் கூடிய விரைவில் ரோகினி என்பவர் யார் என்பதையும் கல்யாணி பற்றிய விஷயங்களும் தெரிய வரப்போகிறது.

சிறகடிக்கும் ஆசை சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -