வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18, 2024

சிங்க பெண்ணில் முக்கியமான விஷயத்தை மறந்த மித்ரா, கருணாகரன்.. ஓட ஓட துரத்த போகும் மகேஷ்

Singapenne: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சிங்க பெண்ணே சீரியலை பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு திங்கட்கிழமை எபிசோடு தான் இப்போதைக்கு பெரிய எதிர்பார்ப்பு. குடோனுக்குள் அன்பும் ஆனந்தியும் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரே நேரத்தில் அன்பு மற்றும் ஆனந்தி இருவருமே இரவு நேரத்தில் காணாமல் போனது மகேஷுக்கு பெரிய தலைவலியாக மாறி இருக்கிறது. திட்டத்தை கச்சிதமாக நிறைவேற்றி விட்டோம் என மித்ரா, அரவிந்த், கருணாகரன் நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மகேசை பொருத்தவரைக்கும் ஏற்கனவே அன்பு மற்றும் ஆனந்தி நெருக்கமான நட்பு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. அப்படி இருக்கும்போது குடோனுக்குள் தெரியாமல் மாட்டிக் கொண்டோம் என இரண்டு பேரும் சொன்னாலும் மகேஷ் நம்ப போவதில்லை.

முக்கியமான விஷயத்தை மறந்த மித்ரா, கருணாகரன்

கண்டிப்பாக அன்புவை கம்பெனியை விட்டு துரத்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. கச்சிதமாக திட்டம் மித்ரா ஒரு பெரிய விஷயத்தை மறந்து விட்டாள். கம்பெனி குடோனில் சிசிடிவி கேமரா இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் கம்பெனியை சுற்றி சிசிடிவி கேமரா கண்டிப்பாக பொறுத்து இருப்பார்கள்.

அப்படி இருக்கும் பட்சத்தில் அன்பு அல்லது மகேஷ் சிசிடிவி கேமராவை சோதித்துப் பார்த்தால் கண்டிப்பாக இவர்கள் கூண்டோடு சிக்குவது உறுதி. யார் சிக்குகிறார்களோ இல்லையோ குடோனுக்கு வெளியே நின்று தாழிட்ட அரவிந்த் கண்டிப்பாக சிக்குவான். இந்த எதிர்பாராத திருப்பம் திங்கட்கிழமை நடக்கிறதா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

சிங்க பெண்ணில் சமீபத்தில் நடந்த சம்பவங்கள்

- Advertisement -spot_img

Trending News