பொறுமையை இழந்த மீனா, நாத்தனாரிடம் சொன்ன உண்மை.. பாண்டியனுக்காக மருமகளை வெறுக்கும் கோமதி

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், மீனா மற்றும் ராஜி கோவிலுக்கு போயிட்டு வீட்டுக்கு வருகிறார்கள். வந்ததும் அங்கே இருக்கும் அரசிடம் திருநீர் கொடுக்கிறார்கள். அதன் பின் இன்னும் அத்தை வரவில்லையா என்று மீனா கேட்கிறார். ஆனால் அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் அரசி கோபமாக எழுந்து போகிறார்.

உடனே ராஜி, அரசிடம் கெஞ்சும்படி பாவமாக பேசுகிறார். ஆனால் மீனா, ராஜியை தடுத்து பொறுமையாக இருந்தது போதும் பொங்கி எழலாம் என்பதற்கு ஏற்ப உனக்கு என்ன பிரச்சினை ஏன் பேசாமல் இருக்கிறாய் என்று கேட்கிறார். எனக்கு எந்த கோபமும் இல்லை. ஆனால் தற்போது குடும்பத்தில் இருப்பவர்கள் சந்தோஷமாக இல்லை. அதற்கு காரணம் நீங்கள் இரண்டு பேர் தான் நின்று நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது என்று சொல்கிறார்.

ராஜி வீட்டில் நகையை திருப்பிக் கொடுக்கும் கோமதி

அதற்கு மீனா, உனக்கு கல்யாணம் ஆன பிறகு உன்னுடைய புருஷனும் இரவும் பகலும் உழைத்துவிட்டு கஷ்டப்படும் பொழுது நீ பார்த்துட்டு சும்மா இருப்பியா? இல்ல அவருக்கு ஏதாவது உதவி பண்ணும் வகையில் சப்போர்ட் பண்ண வேண்டும் என்று நினைக்க தானே செய்வாய். அதை தானே ராஜியும் செய்ய ஆசைப்பட்டால், ஆனால் அதற்கு உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் யாரும் சம்மதம் கொடுக்கவில்லை.

அதனால் வேறு வழி தெரியாமல் யாருக்கும் தெரியாமல் டியூஷன் எடுக்க ஆரம்பித்தாள். அது இவ்ளோ பிரச்சினையாகும் என்று யாருக்கும் தெரியாது. இதற்கு ஏன் நீ கோபப்பட வேண்டும் நீயாவது புரிந்து கொள் என்று சொல்லிய நிலையில் அரசி சரிதான் நீங்கள் சொல்வது உங்கள் இரண்டு பேரும் எந்த தவறும் இல்லை என்று அண்ணிகளுக்கு சப்போர்ட் பண்ணும் விதமாக அரசி உண்மையை புரிந்து கொண்டார்.

இதனை தொடர்ந்து லாக்கரிலிருந்து நகையை எடுத்துட்டு வீட்டிற்கு வரும் கோமதி ராஜிடம் உன்னுடைய அம்மா நகையை எது என்பதை பார்த்து தனியாக குடு என்று சொல்கிறார். அப்பொழுது பழனிச்சாமிக்கு போன் பண்ணி வீட்டிற்கு வா என்று கூப்பிட்ட நிலையில் ராஜியின் அம்மா நகையை கொடுத்து அவர்களிடம் திருப்பி கொடுத்துவிடு என்று சொல்லி அனுப்பி வைக்கிறார்.

இதற்கிடையில் தங்கமயில் அவருடைய நகையை தனியாக எடுத்து வைக்கும் பொழுது அதில் இருக்கும் நகை பாதி கருத்து போய் இருக்கிறது. இதை மற்றவர்கள் பார்த்தால் பிரச்சினையாகிவிடும் என்பதால் அதை யாருக்கும் தெரியாமல் ஒளித்து வைத்து விடுகிறார். ஆனால் அந்த நேரத்தில் அரசி, உங்க நகை சூப்பரா இருக்கிறது. கொஞ்சம் கொடுங்கள் நான் போட்டு பார்த்துட்டு தருகிறேன் என்று சொல்கிறார்.

தங்கமயில் கொடுக்க முடியாத சூழ்நிலையில் பழனிச்சாமி வந்து விடுவதால் இந்த டாபிக்கே அப்படியே மறந்து விடுகிறார்கள். பிறகு பழனிச்சாமி, ராஜியின் அம்மா நகையை எடுத்துட்டு போய் சக்திவேல் மற்றும் முத்துவேல் இருக்கும்பொழுது அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார். அந்த நகை வாங்கின அவர்கள் சரியாக இருக்கிறதா என்று செக் பண்ணி பார்க்க சொல்கிறார்.

ஆனால் இந்த டியூஷன் பிரச்சனை எப்பொழுதுதான் முடிவுக்கு வரும் என்பதற்கு ஏற்ப ஒவ்வொருவரும் மூஞ்சியை தொங்கப் போட்டுக் கொண்டு யாரிடமும் சரியாக பேசாமல் ஏதோ கப்பல் கவிழ்ந்து போனது போல் ஓவராக ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள். அதிலும் கோமதி, தன்னுடைய கணவர் அவமானப்பட்டதை நினைத்து மீனா மற்றும் ராஜியை ஒதுக்கி வருகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -