வெள்ளிக்கிழமை, அக்டோபர் 25, 2024

அப்பா, மகன் செய்த சித்து வேலை.. சமயம் பார்த்து காலை வார காத்திருக்கும் நடிகை

Gossip: திரை மறைவில் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பற்றிய புகார்கள் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே இருக்கிறது. இதில் சில டாப் ஹீரோக்களின் பெயர்களும் வெளிவந்து அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

அதேபோல் புகழின் உச்சியில் இருக்கும் சில நபர்கள் கூட சிக்க வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர். இந்த சமயம் பார்த்து நான்கு எழுத்து நடிகை ஒருவர் முன்னாள் கணவர் மற்றும் மாமனார் செய்த சித்து வேலைகளை வெளியில் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறாராம்.

ஆசை ஆசையாய் காதலித்து கல்யாணம் செய்த நடிகைக்கு அந்த வாழ்க்கை நீண்ட காலம் நிலைக்கவில்லை.. அப்பா மகன் இருவருமே இளம் நடிகைகளுக்கு வாய்ப்பு தருவதாக சொல்லி சில வேலைகளை பார்த்திருக்கின்றனர்.

அப்பா மகன் செய்த வேலை

அந்த விவகாரம் பெரிய பிரச்சனையாக மாறியதால் தான் நடிகை விவாகரத்து வரை வந்துள்ளார். ஆனால் அவர் மேலேயே பழியை போட்டு இந்த விஷயத்தை சாமர்த்தியமாக திசை திருப்பி இருக்கிறது பெரிய குடும்பம்.

இதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என காத்திருந்த நடிகைக்கு சரியான சமயம் வந்துள்ளது. தற்போது அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பலரும் வாயை திறந்திருக்கும் நிலையில் அப்பா மகன் இருவரின் லீலையையும் எடுத்து விட தயாராகி விட்டார் நடிகை.

அவர்களால் பாதிக்கப்பட்ட பெண்களில் யாரையாவது பிடித்து இந்த பிரச்சனையை ஊதி பெரிதாக்கலாம் என அவர் திட்டமிட்டுள்ளாராம். இந்த விவகாரம் எப்போது வேண்டுமென்றாலும் அணுகுண்டு போல் வெடிக்கும் என்கிறது திரையுலக வட்டாரம்.

சமயம் பார்த்து காத்திருக்கும் நடிகை

- Advertisement -spot_img

Trending News