நைசாக பேசி மீனா ராஜியுடன் கூட்டணி சேர்ந்த பாண்டியன் மருமகள்.. மனசுக்குள் வந்த காதலை மறைக்கும் கதிர்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், பாண்டியன் வீட்டிற்கு வந்ததும் கோமதி இடம் காபி கேட்கிறார். கோமதி, தங்கமயிலை கொண்டு போக சொல்லும் பொழுது ராஜி காபி எடுத்துட்டு பாண்டியனிடம் கொடுக்கிறார். ஆனால் அதை பார்த்து பாண்டியன் காப்பியை கீழே தட்டி விட்டு கோமதி என்ற கத்தி கூச்சலிடுகிறார்.

இந்த சத்தத்தை கேட்டு தூங்கிக் கொண்டிருந்த கதிர் என்னாச்சு என்று வந்து பார்க்கிறார். அப்பொழுது பாண்டியன், கோமதி இடம் நான் உன்னிடம் தானே கேட்டேன் என்று சொல்லித் திட்டி விட்டு வெளியே போய் விடுகிறார். பிறகு இதை பார்த்தும் ஒன்னும் சொல்லாமல் கதிரும் உள்ளே போய்விடுகிறார். இதனால் ராஜி மனசு கஷ்டப்பட்டு ரொம்பவே அழ ஆரம்பித்து விட்டார்.

மாமியாரிடம் கோபத்துடன் நியாயம் கேட்டுப் போன மீனா

இவருக்கு ஆறுதல் சொல்லும் விதமாக மீனா, தெரியாமல் பண்ணுன ஒரு விஷயத்திற்கு எல்லோரும் இப்படி பேசாமல் இருப்பது மிகப்பெரிய தவறாகத்தான் இருக்கிறது. இதற்கு இப்போதே ஒரு முற்றுப்புள்ளி வைக்கிறேன் என்று கோபத்துடன் கோமதியிடம் போய் நாங்கள் பண்ணினது தவறுதான் என்று சொல்லி மன்னிப்பு கேட்டு விட்டோம். அதற்கு இத்தனை நாள் எல்லாரும் பேசாமல் இருந்தால் நாங்கள் என்னதான் பண்ண முடியும்.

வேண்டுமென்றால் நாங்கள் இருவரும் வெளியே ஹாஸ்டல்ல போய் இருந்து விடவா? இங்கே எல்லோரும் பேசாமல் இருப்பது எங்களுக்கு கஷ்டமாக இருக்கிறது என்று சொல்கிறார். இதை கேட்டுக் கொண்டிருந்த தங்கமயில், கோமதியிடம் அவர்களை பார்க்கவே ரொம்பவே பாவமாக இருக்கிறது. மன்னிப்பு கேட்கிறார்களா நீங்க ஏன் பேசாமல் இருக்கிறீர்கள். உங்கள் மூன்று பேருடைய ஒற்றுமையை பார்த்து நானே பொறாமைப் பட்டிருக்கிறேன்.

அதுவும் ஒரு மாமியாருடன் இரண்டு மருமகள் இப்படி ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்று நானே கண்ணுபடும் அளவிற்கு பொறாமையுடன் இருந்தேன். அதுதான் பார்க்கவும் நன்றாக இருந்தது. மறுபடியும் பழைய மாதிரி அந்த ஒற்றுமை வரவேண்டும். நீங்களும் பேசாமல் இருந்தால் அவர்கள் என்னதான் பண்ணுவாங்க என்று மீனா ராஜிக்கு சப்போர்ட்டாக கோமதியிடம் நைசாக பேசுகிறார்.

உடனே கோமதியும், உங்களுக்காக இல்லாட்டலும் தங்கமயில் சொன்னதுக்காக நான் இனி உங்களிடம் பேசுகிறேன் என்று சொல்லி போய் விடுகிறார். உடனே மீனா மற்றும் ராஜி, தங்கமயிலிடம் ரொம்ப நன்றி என்று சொல்லி மூன்று பேரும் ஒட்டிக் கொண்டார்கள். அந்த வகையில் இவர்களுடைய கூட்டணி ஒற்றுமையாகி விட்டது. இதனைத் தொடர்ந்து கதிர், ஏற்கனவே ராஜியிடம் நீ என்ன பொய் சொல்லி என்னிடம் மறைத்தாலும் நான் கவலைப்பட மாட்டேன்.

ஏனென்றால் நீயும் நானும் இந்த ரூமில் ஒரு ரூம் மேட் தான் என்று சொல்லி இருந்தார். ஆனால் தற்போது ராஜி செய்த சின்ன சின்ன தவறுக்கும் கோபப்பட்டு வரும் கதிர் மனதிற்குள் ராஜீ பற்றிய காதல் உணர்வுகள் வந்துவிட்டது. அதனால் தான் ராஜி ஏதாவது மறைத்து பொய் சொன்னாலும் அதற்கு அதிக அளவில் கோபப்பட்டு பேசாமல் திரிகிறார். இவர்களுடைய இந்த விரிசல் அதிகமான காதலை ஏற்படுத்தப் போகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவங்கள்

Next Story

- Advertisement -