Home Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | KisuKisu சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த பாடகி.. பப்ளிசிட்டிக்காக செய்த வேலை

சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்த பாடகி.. பப்ளிசிட்டிக்காக செய்த வேலை

gossip-4
gossip-4

Gossip: இப்போது அந்த பாடகி விவகாரம் தான் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. சில வருடங்களுக்கு முன்பே இந்த பாடகியால் ஒட்டுமொத்த திரையுலகமும் அதிர்ந்து போனது. ஆனால் அதற்கு நான் காரணம் இல்லை என சமீபத்தில் தான் ஒரு விளக்கம் கொடுத்திருந்தார்.

அதேபோல் அந்த விவகாரத்தில் ஒல்லி நடிகர் முதல் எவர்கிரீன் நடிகை வரை அனைவருக்கும் பங்கு இருக்கிறது என அதிர வைத்தார். இதனால் சில நாட்கள் அவர் ஹாட் டாப்பிக்காக இருந்தார். ஆனால் அது அவருக்கே பிரச்சனையாக முடிந்தது.

அதையடுத்து சில காலம் அவர் ஒதுங்கி இருந்தார். ஆனால் இப்போது மீண்டும் பல திரை மறைவு சம்பவங்களை கூறி பிரச்சனையை கிளப்பி இருக்கிறார். அதிலும் பிரபல நடிகையின் நைட் பார்ட்டி குறித்து இவர் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பப்ளிசிட்டிக்காக செய்த வேலை

ஆனால் சம்பந்தப்பட்ட நடிகையோ இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்போது நீதி கேட்கும் அளவுக்கு வந்து விட்டாராம். எப்போது வேண்டுமானாலும் பாடகி இது குறித்து விசாரிக்கப்படலாம் என்கின்றனர்.

ஏனென்றால் பப்ளிசிட்டிக்காக இவர் இல்லாத விஷயத்தை கூட அள்ளி விடுகிறாராம். அதேபோல் சும்மா இருந்த சங்கை ஊதி கெடுத்தது போல் மற்றொரு பிரபலத்தையும் வம்புக்கு இழுத்திருந்தார்.

ஏற்கனவே ஒரு பாடகி அந்த பிரபலம் குறித்து பல விஷயங்களை வெளியிட்டு இருந்தார். அதில் இவரும் தன் பங்குக்கு அவர் தன்னை பண்ணை வீட்டுக்கு அழைத்தார் என கொளுத்தி போட்டார். இந்த விவகாரமும் இப்போது சூடு பிடித்துள்ள நிலையில் பாடகியை அமைதிப்படுத்த சில வேலைகளும் நடந்து வருகிறதாம்.

பாடகி கிளப்பிய பெரும் பஞ்சாயத்து