Home Tamil Movie News தங்கமயிலை கண்மூடித்தனமாக நம்பும் பாண்டியன் குடும்பம்.. சும்மா இருக்கும் குமரவேலுவை சீண்டி விட்ட ராஜி கதிர்

தங்கமயிலை கண்மூடித்தனமாக நம்பும் பாண்டியன் குடும்பம்.. சும்மா இருக்கும் குமரவேலுவை சீண்டி விட்ட ராஜி கதிர்

pandian stores 2 (31)
pandian stores 2 (31)

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ஆதார் அட்டை மாமா கேட்கிறார் என்று தங்கமயில் வீட்டிற்கு வந்து புலம்புகிறார். அதை கொடுத்து விட்டால் என்னுடைய வயது வித்தியாசம் தெரிந்துவிடும். அவ்வளவுதான் இதோட நான் மாட்டிக் கொள்வேன் என்று பாக்கியத்திடம் புலம்பி தவிக்கிறார். இது எதுவும் தெரியாத தங்கமயில் அப்பா, ஆதார் அட்டையை பாண்டியனிடம் கொடுத்து விடுகிறார்.

பிறகு வீட்டிற்கு வந்து பாண்டியனை பார்த்து கொடுத்த விஷயத்தை தங்கமயில் மற்றும் மனைவியிடம் சொல்கிறார். இதை கேட்டதும் பாக்கியம் மற்றும் தங்கமயில் இருவரும் சேர்ந்து அவரை திட்டுகிறார்கள். அதை பாண்டியன் பார்க்கக்கூடாது என்று நாங்கள் பிளான் பண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது எதுவும் தெரியாமல் நீங்கள் போய் கையில கொடுத்துட்டு வந்து இருக்கீங்க என்று தங்கமயில், அப்பாவை திட்டுகிறார்.

சக்திவேல் போட்ட பிளானை செய்ய போகும் குமரவேலு

சரி பரவாலை இதை எப்படியாவது சமாளிக்கணும் என்று பாக்கியம் அனைவரையும் கூட்டி பாண்டியன் வீட்டிற்கு போகிறார். போகும்போதே தங்கமயில் நான் இதோடு அவ்வளவுதான். இனி உங்க கூட அங்க தான் வந்து இருக்கணும் என்னை கழுத்தை பிடித்து வெளியே தள்ளி விடுவாங்க என்று பயத்தில் புலம்பிக் கொண்டே போகிறார். இதற்கிடையில் செந்தில், தங்கமயில் ஆதார் அட்டையை வீட்டிற்கு கொடுக்க வந்திருக்கிறார்.

அதை கோமதி மற்றும் ராஜி யாரும் வயதை பார்க்காமல் விட்டுவிடுகிறார்கள். அப்பொழுது அங்கே வந்த பாக்கியம் தங்கமயில் எதார்த்தமாக பேசிக் கொள்கிறார்கள். வயசு வித்தியாசத்தை கண்டுபிடிக்காத பாண்டியன் குடும்பத்தில் இருப்பவர்கள் சாதாரணமாக தங்கமயில் மற்றும் அம்மாவிடம் பேசுகிறார்கள். அடுத்ததாக பாக்கியம், தங்கமயில் இடம் யாருக்கும் உன்னுடைய வயசு வித்தியாசம் தெரியவில்லை.

நீயே ஏதாவது பேசிக்கொண்டே குழப்பி விடாத. எது நடந்தாலும் சமாளித்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். உடனே தங்கமயில், அப்படி என்றால் நாளைக்கு பதிவு பண்ணும் போது நீயும் என் கூட வா? அப்பதான் எனக்கு நிம்மதியாக இருக்கும் என்று கூப்பிடுகிறார். உடனே பாக்கியம், அவ்வளவு தானே நான் அங்கே வந்து எல்லாத்தையும் சமாளித்துக் கொள்கிறேன். நீ பயப்படாம தைரியமாக இரு என்று ஆறுதல் சொல்லிவிட்டு போகிறார்.

எதுவும் தெரியாத பாண்டியன் குடும்பம் தங்கமயில் மற்றும் இந்த குடும்பத்தை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். இதற்கிடையில் குமரவேலு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கிறார். இதை பார்த்த கதிர், இவனால் ராஜிக்கு ஏதாவது பிரச்சனை வரும் என்று ராஜி காலேஜுக்கு போயிட்டு வரும் வரை அங்கேயே காத்துக் கொண்டிருக்கிறார். பிறகு ராஜி வீட்டுக்கு போகும் போது கூடவே கதிர் பேசிக்கொண்டு போகிறார்.

அப்பொழுது இருவரும் நக்கல் அடித்து ஒருவரை ஒருவர் சிரிச்சு பேசி ஜாலியாக இருப்பதை குமரவேலு பார்க்கிறார். அத்துடன் குமரவேலு பார்க்கிறார் என்று தெரிந்தும் வேண்டுமென்றே அவரை வெறுப்பேத்தும் விதமாக ராஜி சந்தோஷமாக இருப்பது போல் கதிரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

இதை பார்த்து கடுப்பான குமரவேலு, அப்பா சொன்னது சரிதான். எனக்கு கல்யாணம் நடக்க வேண்டும் என்றால் பாண்டியன் வீட்டு மகளை தான் நான் கல்யாணம் பண்ண வேண்டும் என்ற மனநிலைக்கு குமரவேலு வந்து விடுகிறார். இனி குமரவேலு செய்யப் போகும் ஒவ்வொரு விஷயமும் பாண்டியன் குடும்பத்திற்கு மிகப்பெரிய பிரச்சினையை கொடுக்கப் போகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடந்த சம்பவம்