முதல் நாளே வெளுத்து வாங்கிய ரவீந்தர்.. ஆரம்பிக்கவே இல்ல, அதுக்குள்ளையேவா!

விஜய் டிவியில் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி நேற்று தொடங்கப்பட்டிருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய சில மணி நேரங்களிலேயே போட்டியாளர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த சீசனில் ஆண்கள் வெர்சஸ் பெண்கள் என்று இரண்டு பிரிவாக போட்டியாளர்கள் தனித்தனியாக விளையாட இருக்கிறார்களாம்.

முதல் நாளே, ஒரு டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களுக்கு சண்டையை மூட்டி விட்டிருக்கிறது பிக் பாஸ் .பிக் பாஸ் வீட்டுக்கு போட்டியாளர்கள் வந்த உடனே வீட்டின் கதவை திறக்காமல் அவர்களை கார்டன் ஏரியாவில் பிக் பாஸ் காத்திருக்க வைத்திருந்தார். ஆறு போட்டியாளர்கள் வந்த பிறகு அவர்களை வீட்டிற்குள் அனுமதித்து இருந்தார்.

வீட்டிற்குள் வந்த போட்டியாளர்களிடம் உள்ளே ஒரு கோடு போடப்பட்டிருக்கிறது நீங்கள் வீட்டை முழுமையாக சுற்றிப் பார்த்துவிட்டு கோட்டிற்கு அந்தப் பக்கம் போகிறோம் என்று நினைக்கிறீர்களா? இந்த பக்கம் போகப்போகிறேன் என்று நினைக்கிறீர்களா என்பதை பாய்ஸ் தனியாகவும் கேர்ள்ஸ் தனியாகவும் சொல்லுங்கள் என்று பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து இருக்கிறார்.

வெளுத்து வாங்கிய ரவீந்தர்

லிவிங் ஏரியாவில் எந்த இடத்தில் உட்கார்ந்து இருக்கிறீர்களோ அதே இடத்தில் நான் சொல்கிற வரைக்கும் உட்கார்ந்திருக்க வேண்டும். யாரும் யாரிடமும் பேசவே கூடாது என்று அவர்களுக்கு பனிஷ்மென்ட் கொடுத்தது பிக் பாஸ்.

இதை தொடர்ந்து, ரவீந்தர் ஆண்கள் அணியில் இருக்கும் நிலையில் தன்னால் குறைவான இடத்திற்கு இருக்க முடியாது என்பதற்காகவே ஆண்கள் அணியில் தங்களுக்கு பிறகு வருபவர்களும் கஷ்டப்படக் கூடாது என்று பெண்களிடம் வாதித்து கொண்டிருக்கிறார்.

முதல் நாளே இவ்வளவு fire mode-இல் இருக்கிறாரே, போக போக என்னவெல்லாம் செய்யபோகிறாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -spot_img

Trending News