செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 22, 2024

அப்பத்தாவை நினைத்து புலம்பும் கோமதி ராஜி.. மருமகளை காப்பாற்ற பாண்டியனின் மாமியார் போட்ட நாடகம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், கோமதி மற்றும் ராஜி தன்னுடைய புகுந்த வீட்டில் ஏதோ பிரச்சனை என்று ரொம்பவே பீல் பண்ணுகிறார்கள். ஆனால் யாருக்கு என்ன பிரச்சனை என்று தெரியாமல் குழப்பத்திலேயே தவிக்கிறார்கள். பிறகு செந்திலுக்கு தெரிந்த விஷயத்தை மீனாவுக்கு சொல்லிய பின் வீட்டிற்கு வந்து எப்படியாவது எடுத்து சொல்லலாம் என்று மீனா வீட்டிற்கு வருகிறார்.

அதே நேரத்தில் செந்தில் மற்றும் கதிர் அங்கே இருக்கும் பொழுது மீனா கொஞ்சம் கொஞ்சமாக அப்பத்தாவுக்கு உடம்பு சரியில்லை மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள் என்ற விஷயத்தை சொல்கிறார். இதை கேட்டு பதட்டமான கோமதி மற்றும் ராஜி அழுது ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

ராஜி மற்றும் கோமதியின் அழுகையை பார்த்ததும் கதிர், அப்பத்தாவை பார்க்க கூட்டிட்டு போகலாம் என்று செந்தில் இடம் சொல்கிறார். செந்தில் எதற்கும் அப்பாவிடம் கேட்டுட்டு போகலாம் என்று பாண்டியனுக்கு போன் பண்ணுகிறார். ஆனால் பாண்டியன், ஆஸ்பத்திரிக்கு போனா அங்க தேவையில்லாத பிரச்சனை பண்ணுவார்கள்.

ஏற்கனவே நீ ஆஸ்பத்திரியில் இருக்கும் பொழுது உன்னையே ரொம்ப திட்டி அனுப்பினாங்க. இதுல உங்க அம்மா ராஜியை கூட்டிட்டு போனா இன்னும் கஷ்டதான் படுத்துவாங்க அதெல்லாம் வேண்டாம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். பிறகு பக்கத்தில் இருப்பவர்கள் கோமதி மற்றும் ராஜி அழுகை சத்தத்தை கேட்டு வீட்டில் ஏதோ பிரச்சினை என்று வந்து விசாரிக்கிறார்கள்.

அப்பொழுது அப்பத்தாவிற்கு உடம்பு சரி இல்லை என்று தெரிந்ததும் இன்னும் பயமுறுத்து அளவிற்கு பேச ஆரம்பித்து விட்டார்கள். உடனே மீனா மற்றும் கதிர் சமாதானப்படுத்துகிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் ஆஸ்பத்திரியில் இருக்கும் அப்பத்தா சீரியஸாக இருப்பது போல் பழனிச்சாமி ரொம்ப பீல் பண்ணி அழ ஆரம்பித்து விட்டார்.

ஆனால் அப்பத்தா டாக்டர்களிடம் பேசிய பொழுது தான் தெரியுது அத்தனையும் நடிப்புதான் என்று. அதாவது சக்திவேல் மற்றும் முத்துவேல் இருவரும் சேர்ந்து வீட்டிற்கு வந்த மருமகளை கொடுமைப்படுத்தி அடித்து பிரச்சனை பண்ணும் பொழுது அதை எப்படி சமாளிக்க என்று தெரியாமல் அப்பத்தா கொஞ்சம் பதட்டம் அடைந்த நிலையில் மயக்கம் போட்டு விழுந்து விட்டார்.

ஆனால் அவ்வளவுதான் மத்தபடி வேற எந்த பிரச்சினையும் இல்லை. இருந்தாலும் டாக்டர்கள் மூலம் நெஞ்சுவலி போல் பொய் சொல்லி ஒரு டிராமாவை நடத்தி விட்டார். இது எதுவும் தெரியாத கோமதி மற்றும் ராஜி ரொம்பவே வருத்தப்பட்டு ஃபீல் பண்ணுகிறார்கள். இதனை தொடர்ந்து அப்பத்தா உடம்பு கொஞ்சம் சோர்வாக இருப்பதால் யாரும் அவர்களை தொந்தரவு பண்ணக்கூடாது.

நல்லபடியாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லும் அட்வைஸின்படி முத்துவேல், பொண்டாட்டியிடம் சண்டை போடாமல் வீட்டில் பிரச்சனை பண்ணாமல் கொஞ்சம் அடங்கி போவார் என்று அப்பத்தா நம்புகிறார். ஆனால் என்ன ஆனாலும் திருந்த மாட்டேன் என்று இந்த சக்திவேல் வன்மத்துடன் சுற்றுவதால் தன் பிள்ளைக்கு திருமணம் ஆகவேண்டும் என்பதால் குறுக்கு புத்தியில் யோசித்து பாண்டியன் குடும்பத்திற்கு மிக பெரிய ஆப்பு வைக்கப் போகிறார்.

- Advertisement -spot_img

Trending News