புதன்கிழமை, அக்டோபர் 23, 2024

முத்து மீனாவை பட்டி டிங்கிரி பண்ணி முதுகு பின்னாடி குத்த போகும் ரோகிணி.. மொத்த பணத்தையும் கொட்டிய மனோஜ்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில் மனோஜ், அவருடைய பிசினஸ் டீலுக்காக மொத்த குடும்பத்தையும் பணக்கார தோற்றுத்துடன் மாற்றி கடை ஓபன் பண்ணி 100 நாள் ஆனதை கொண்டாடுவதற்கு முடிவு பண்ணி இருக்கிறார். இது சம்பந்தமாக ரவி மற்றும் முத்துவிடம் பேசி சம்மதத்தையும் வாங்கிக் கொண்டார்.

அதே மாதிரி ரோகினி, ஸ்ருதி மற்றும் மீனாவிடமும் பேசி சம்மதத்தை வாங்கி விட்டார். இதனை தொடர்ந்து பங்க்சனை பிரம்மாண்டமாக நடத்துவதற்கு முடிவு பண்ணி ஏற்பாடுகள் அனைத்தும் செய்து விட்டார்கள். அந்த வகையில் விஜயாவை நடிகை போல மேக்கப் செய்து அழகாக கூட்டிட்டு வந்து விடுகிறார். அத்துடன் ஸ்ருதி மற்றும் ரவி கெத்தாக வந்து விடுகிறார்கள்.

இவர்களைத் தொடர்ந்து ரோகிணி மற்றும் மனோஜ் தொழிலதிபர் லுக்குடன் வந்து விடுகிறார்கள். இப்படி இவர்கள் அனைவரும் அங்கே ஒன்று கூடிய நிலையில் விஜயா, மீனா மற்றும் முத்து வரமாட்டார்கள். மீனாவிற்கு இது செட் ஆகவில்லை என்று அப்படியே ஓடிப் போய் இருப்பார் என்று மட்டம் தட்டி பேசுகிறார். ஆனால் அங்கே முத்து மற்றும் மீனா நல்லா கெத்தாக பணக்கார தோற்றத்துடன் வந்து விடுகிறார்கள்.

இவர்களை பார்த்ததும் அங்கு இருப்பவர்கள் அனைவரும் வாய் அடைத்து போய் நின்று விடுகிறார்கள். பிறகு மீனாவின் அழகை ரசிக்கும் விதமாக முத்து கொஞ்சம் ஓவராக ரொமான்ஸ் பண்ணி மீனாவை சுற்றி போட்டோ எடுத்துக் கொண்டிருக்கிறார். இதை பார்த்ததும் ரோகிணி, வித்யாவிடம் இதுதான் நல்ல சான்ஸ் இன்னைக்கு எப்படியாவது முத்துவிடம் இருக்கும் வீடியோவை எடுத்து விட வேண்டும் என்று சொல்கிறார்.

உடனே வித்யா, அந்த வீடியோவுக்காக தானே இவ்வளவு ஏற்பாடுகள் பண்ணி அவர்களுக்கு பட்டி டிங்கிரி எல்லாம் பண்ணி கூட்டிட்டு வந்திருக்கிறாய். அதனால் நம் நினைத்தபடி சம்பவத்தை சிறப்பாக செய்து விடலாம் என்று சொல்கிறார். ஆனால் இது எதுவும் தெரியாத முத்து மற்றும் மீனா, ரோகிணியை கண் மூடித்தனமாக நம்பியதால் கூடவே இருந்து முதுகில் குத்தும் விதமாக ரோகிணி, மீனாவின் தம்பி வீடியோவை வைத்து மீனா குடும்பத்தை அசிங்கப்படுத்த போகிறார்.

அதாவது தான் தப்பிக்க வேண்டும் என்பதற்காக மற்றவர்கள் வாழ்க்கையே பலியாடாக ஆக்குவதற்கு ரோகிணி துணிந்து விட்டார். இது எதுவும் தெரியாத மனோஜ் இது ஏதோ ஒரு பிசினஸ் டீல் என்று நம்பி மொத்த பணத்தையும் வாரி இறைத்து வருகிறார். கஞ்சித்தனமாக இருந்த மனோஜ் அதிக அளவில் பேராசை பட்டதால் இருப்பதும் போச்சு என்று சொல்வதற்கு ஏற்ப நஷ்டப்பட்டு ஏமாந்து போய் நிற்கப் போகிறார்.

ஆனாலும் ரோகிணி என்னதான் தில்லாலங்கடி வேலை பார்த்தாலும் முத்து மற்றும் மீனாவுக்கு இடையில் விரிசல் வராத அளவிற்கு இரண்டு பேரும் ஒற்றுமையாக தான் இருப்பார்கள். அதே நேரத்தில் மீனாவின் குடும்பமும் பிரச்சனையில் மாட்டிக் கொள்ளாதபடி முத்து உதவியாக இருப்பார். ஆனால் இதன் பிரிவு தான் ரோகிணியின் உண்மையான ரகசியம் வெளிவர போகிறது. அதனால் எதுவரை ஆட முடியுமா அதுவரை ரோகிணி ஆடட்டும்.

- Advertisement -spot_img

Trending News