வியாழக்கிழமை, அக்டோபர் 24, 2024

பிக்பாஸ் பிளானில் மண்ணள்ளி போட்ட VJS.. அர்னவ்வை தொடர்ந்து இந்த வாரம் வெளியேறப் போவது இவரா.?

Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் சுமுகமாக சென்று கொண்டிருந்தாலும் இப்போது சில சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. அதிலும் புது தொகுப்பாளர் விஜய் சேதுபதி இரண்டாவது வாரத்திலேயே நெகட்டிவ் விமர்சனங்களை சந்திக்க தொடங்கி விட்டார்.

இதற்கு முக்கிய காரணம் அவர் நடந்து கொள்ளும் முறை தான். இயல்பாக பேசுவது சரிதான் என்றாலும் சில இடங்களில் முதிர்ச்சியோடு போட்டியாளர்களையும் பார்வையாளர்களையும் அணுக வேண்டும்.

ஆனால் அப்படி இல்லாமல் ஆட்டத்தை மாற்றும் அளவுக்கு இருக்கிறது அவருடைய போக்கு. மற்றவர்கள் மனதில் இருப்பதை முழுமையாக பேசவிடும் அளவுக்கு பொறுமை அவரிடம் இல்லை.

பல நேரங்களில் அவர் எரிச்சல் அடைவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த வாரம் முழுவதும் இப்படிப்பட்ட விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அது மாறுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

விஜய் சேதுபதியால் மாறிய ஆட்டம்

மேலும் கடந்த வாரம் அர்னவ் வீட்டை விட்டு வெளியேறி இருந்தார். ஆனால் பிக் பாஸ் டீம் போட்ட பிளான் இது கிடையாது. ஏனென்றால் சம்பளத்தை கூட முன்ன பின்ன அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம்.

ஆனால் கடைசிவரை நாங்கள் நிகழ்ச்சியில் தொடர்வோம் என்பதுதான் அர்னவ் அன்சிதா போட்ட அக்ரிமெண்ட். ஆனால் சில பிரஷர் காரணமாக அர்னவ் வெளியேறியிருக்கிறார். அதை அடுத்து இந்த வாரம் அன்சிதா வெளியேற விரும்புவதாக டீமிடம் சொல்லி இருக்கிறாராம்.

ஆனால் ஓட்டு எண்ணிக்கை படி தர்ஷா குப்தா தான் கடைசி நிலையில் இருக்கிறார். அவரை விடவும் விஜய் டிவிக்கு மனசு கிடையாது. ஏனென்றால் அவரால் சில கண்டன்ட் கிடைக்கிறது.

இப்படி சில போட்டியாளர்களை இறுதிவரை கொண்டு வந்து விட வேண்டும் என பிக்பாஸ் டீம் ஆரம்பத்திலேயே முடிவெடுத்து இருக்கிறது. ஆனால் தற்போது அது சொதப்பல்லில் முடிந்திருக்கிறது.

இதற்கு விஜய் சேதுபதியும் ஒரு மறைமுக காரணம் என்கின்றனர். எது எப்படியோ தற்போது கிளம்பி இருக்கும் விமர்சனங்களை பார்த்து அவர் தன்னுடைய அணுகுமுறையை மாற்றிக் கொண்டால் நல்லது. இல்லை என்றால் பார்வையாளர்களின் வெறுப்புக்கு ஆளானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

- Advertisement -spot_img

Trending News