வியாழக்கிழமை, அக்டோபர் 24, 2024

ஆனா ஊனா கண்ணுல தண்ணி வச்சிர வேண்டியது.. ரூல்ஸ் ஆனந்தியை கதறவிட்ட முத்து

Biggboss 8: இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்கள் ஒரு பெரும் ஆயுதத்தை தன் கையில் வைத்திருக்கின்றனர். கடந்த சீசனில் உமன் கார்டு என்ற விஷயத்தை வைத்து மாயா கூட்டணி செய்த அட்டூழியம் கொஞ்சம் நெஞ்சம் கிடையாது.

அதுவே இந்த சீசனில் பெண்களின் ஆயுதமான கண்ணீரை கையில் எடுத்திருக்கிறது கேர்ள்ஸ் டீம். முதல் இரண்டு வாரங்களில் ஜாக்லின் இந்த வேலையை தான் தொடர்ந்து செய்து வந்தார்.

இப்பொழுது அதை ஆனந்தி கையில் எடுத்திருக்கிறார். ஆரம்பத்தில் இவர் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த நிலையில் அரிதிலும் அரிதாக ஏதாவது ரூல்ஸ் பேசி எரிச்சல் ஊட்டுவார்.

அதில் தற்போது பிக்பாஸ் வீடு ஹோட்டலாக மாறி இருக்கிறது. அதன்படி போட்டியாளர்கள் ஊழியர்களாகவும் கெஸ்ட் ஆகவும் இருக்கின்றனர். இதில் ஊழியர் ஆனந்தி கெஸ்ட் முத்துவை கேள்வி கேட்பது போல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

சீன் போட்டு கடுப்பேற்றும் ஆனந்தி

அதற்கு முத்து நான் MK என்ற ரோலை செய்தேன். அந்த கதாபாத்திரம் இப்படி இருக்கக் கூடாது என்று சொல்வதற்கு ஊழியர்களுக்கு உரிமை கிடையாது என்கிறார். உடனே ஆனந்தி பிரச்சினை நடந்தபோது நீங்கள் பேசிய விதம் பிடிக்கவில்லை என்று சொன்னார்.

உடனே முத்து பைவ் ஸ்டார் ஹோட்டலுக்கு வருபவர்கள் எல்லோரும் இனிமையாக தான் பேசுவார்கள் என்று கிடையாது என சொல்கிறார். அதற்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாத ஆனந்தி உடனே அழுதபடி உன் கிட்ட பேச மாட்டேன் போ என்று குழந்தை போல ஓடிவிட்டார்.

உடனே அவர் பின்னாடியே போன மற்ற பெண்கள் அவரை சமாதானப்படுத்துகின்றனர். உண்மையில் இதை பார்க்கும் போதே பெண்கள் செய்யும் தவறு வெளிப்படையாக தெரிகிறது.

தன் பக்கம் நியாயம் இல்லை என்றால் உடனே கண்ணீரை வைத்து சீன் போடுகின்றனர். அதுதான் இப்போதும் நடந்திருக்கிறது. தற்போது பார்வையாளர்களின் வெறுப்புக்கு ஆளாகி இருக்கும் கேர்ள்ஸ் டீம் இதை வைத்தே ஒரு பஞ்சாயத்து செய்ய போகிறார்கள்.

- Advertisement -spot_img

Trending News