சனிக்கிழமை, அக்டோபர் 26, 2024

ரோகிணி போட்ட பிளானில் மனோஜ்க்கு ஆப்பு வைத்த முத்து.. கல்யாணிக்கு விழப்போகும் முதல் அடி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், மனோஜ் வைக்கும் பார்ட்டியில் முத்துவிடமிருந்து எப்படியாவது போனை எடுத்து அதில் இருக்கும் சத்யா பற்றிய வீடியோவை ஆட்டைய போட வேண்டும் என ரோகிணி பிளான் போட்டார். ஆனால் அதற்கு முத்து பார்ட்டியில் நிதானமாக இருந்தால் எடுக்க முடியாது என்பதால் சரக்கு பார்ட்டி வைத்தார்.

அதன்படி மனோஜ் மற்றும் ரவி அனைவரும் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். முதலில் முத்துவும் குடிக்காமல் தான் இருந்தார். ஆனால் அங்கு இருப்பவர்களை பார்த்ததும் அவரால் சும்மா இருக்க முடியவில்லை உடனே குடிக்க ஆரம்பித்து விடுகிறார். பிறகு அங்கு வந்திருந்த அனைவரும் குடித்துவிட்டு ஆட்டம் போட ஆரம்பித்து விடுகிறார்கள். அத்துடன் மனோஜ்க்கு டீலர்ஷிப் கொடுக்கிறேன் என்று சொன்ன நபரும் குடித்து முத்துவிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்படி முத்துவிடம் பேசும்போது அந்த ஓனர், நீங்கள் ரொம்ப நல்லவங்க உங்க குடும்பமும் யாரையும் ஏமாற்றாமல் பொய் சொல்லாமல் ஒற்றுமையாக இருப்பது சந்தோஷமாக இருக்கிறது என்று அந்த ஓனர் சொல்கிறார். இதை கேட்டதும் முத்து, நாங்கள் யாரும் பணக்கார குடும்பத்தை சேர்ந்தவங்க இல்ல. நான் 50 காருக்கு ஓனருமில்லை, என்னிடம் வெறும் ரெண்டு கார் தான் இருக்கிறது. ஆனால் கூடிய விரைவில் ஒரு டிராவல்ஸ் வைக்கும் அளவிற்கு வளர்ந்து விடுவேன் என்று சொல்கிறார்.

அதை மாதிரி ரவியை காட்டி இது என்னுடைய தம்பி ரெஸ்டாரண்டில் வேலை பார்க்கிறார். அவனும் அந்த ரெஸ்டாரண்டுக்கு ஓனர் இல்லை. ஆனால் அவனுடைய கனவே ரெஸ்டாரண்ட் வைக்க வேண்டும் என்பதுதான். அதனால் கூடிய விரைவில் அவனும் கனவை நிறைவேற்றும் விதமாக ரெஸ்டாரண்டுக்கு ஓனராகி விடுவான். இதெல்லாம் நாங்கள் உங்களிடம் பொய் சொல்லி மறைத்து விட்டோம் என்று எங்களை தப்பா நினைக்காதீங்க.

எல்லாம் மனோஜுக்காக தான், அவனுக்கு தொழிலதிபராக வேண்டும் என்று ஆசை. அவனுடைய ஆசை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக நாங்கள் ஒட்டுமொத்தமாக பொய் சொல்லிவிட்டோம் எங்களை மன்னித்து விடுங்கள் என்று டீலர்ஷிப் கொடுத்த ஓனரிடம் எல்லா உண்மையும் போட்டு உடைத்து விடுகிறார். இதை பக்கத்தில் இருந்து கேட்ட ரோகிணி மற்றும் மனோஜ் பதட்டத்துடன் என்ன ஆகும் என்று பயப்பட ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆனால் அந்த டீலர்ஷிப் கொடுக்கும் ஓனர், சுயநினைவு இல்லாமல் இருந்ததால் முத்து சொல்வதை பெருசாக எடுத்துக் கொள்ளாமல் முத்து உண்மையை சொன்னதற்கு ரொம்பவே நன்றி என்று பாராட்டி பேசி விட்டார். ஆனால் காலையில் ஒவ்வொருவருக்கும் புத்தி தெரிந்த பிறகு தான் என்ன பூகம்பங்கள் வெடிக்கப் போகிறது என்று தெரிய வரப்போகிறது. அந்த வகையில் எப்படி மனோஜ்க்கு இந்த டீலர்ஷிப் கேன்சலாகவும் வாய்ப்பு இருக்கிறது.

ரோகிணி போட்ட பிளானில் மனோஜ்க்கும் ரோகிணிக்கும் சேர்த்து முத்து ஆப்பு வைத்த மாதிரி ஒரு சம்பவத்தை செய்து விட்டார். எந்த ஒரு விஷயம் அண்ணாமலைக்கு தெரிந்த பிறகு இதற்கெல்லாம் காரணம் ரோகிணி தான் என்று தெரிய வரும் பொழுது இதற்கும் சேர்ந்து திட்டு விழப் போகிறது. இப்படி ரோகிணி போட்ட பிளானில் முதல் முறையாக தோற்கும் விதமாக பெருத்த அடி விழப்போகிறது. முத்துவுக்கு விரித்த வலையில் ரோகிணியை மாட்டிக் கொள்ளப் போகிறார்.

இதற்கிடையில் முத்துவிடம் இருந்து போனை ஆட்டை போட்ட ரோகினி, முத்துவின் போனை மனோஜின் பாக்கெட்டில் வைத்திருந்தார். ஆனால் அதுவும் ரோகினி கையில் கிடைக்காத அளவிற்கு மனோஜ் சொதப்பி விடுவார். கடைசியில் ரோகினி ஏமாந்து தான் போகப் போகிறார்.

- Advertisement -spot_img

Trending News