சனிக்கிழமை, அக்டோபர் 26, 2024

கார்த்திகை தீபம் சீரியலில் தீபாவை மிரட்ட எல்லை மீறிய ஐஸ்வர்யா.. கடைசி நிமிடத்தில் வந்து காப்பாற்றிய கார்த்திக்

Karthigai Deepam Serial: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலில் கார்த்திக், தீபாவை பத்திரமாக பாதுகாத்து கூட்டிட்டு வருவேன் என்று அம்மாவிடம் வாக்கு கொடுத்து இருக்கிறார். ஆனால் கார்த்திகை பழிவாங்க வேண்டும் என்று தீபாவை கொலை செய்வேன் என துர்கா பகையுடன் திரிகிறார். அதே நேரத்தில் ஐஸ்வர்யா போட்ட பிளான் படி ரூபஸ்ரீ, கார்த்திகை போலீஸ் இடம் மாட்டி விட்டார்.

அத்துடன் ஐஸ்வர்யாவும் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து தப்பித்து தீபாவை கொலை செய்வதற்கு வெளியே வந்து விடுகிறார். வந்ததும் தீபா எங்கே இருக்கிறார் என்று கண்டறியும் விதமாக ஆசிரமத்தில் இருப்பவர்களுடன் இருக்கிறார் என்று தெரிந்து கையில் துப்பாக்கியுடன் தீபாவை கொலை செய்ய வந்து விட்டார்.

இதை தடுக்கும் விதமாக சத்தி, ஐஸ்வர்யாவிடம் போராடுகிறார். ஆனாலும் ஐஸ்வர்யா, தீபாவை சுடுவதற்கு தயாராகி விட்டார். கடைசி நேரத்தில் கார்த்திக் வந்து ஐஸ்வர்யாவிடமிருந்து தீபாவை காப்பாற்றி விடுவார். பிறகு சொன்னபடி கச்சேரி நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறும்.

ஆனால் அங்கே துர்கா பிரச்சினை பண்ணும் விதமாக தீபாவை குறி வைத்து அசம்பாவிதம் நடக்கப்போகிறது. பிறகு தீபா மற்றும் கார்த்திக் ஒன்றாக சேர்ந்து சந்தோஷமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் கீதா, தீபாவை காப்பாற்றி அவருடைய உயிரை பணயம் வைத்து விடுவார். அதன் பிறகு தீபாவை அம்மாவிடம் கூட்டிட்டு சொன்ன வாக்கை காப்பாற்றும் விதமாக கார்த்திக் தீபாவுடன் சேர்ந்து வாழ்வார்.

இதற்கு இடையில் துர்கா செய்த சில அசம்பாவிதத்தால் தீபாவிற்கு பழைய நினைவுகள் எல்லாம் வந்துவிடும். அடுத்து கார்த்திக்குடன் சேர்ந்து சந்தோஷமான வாழ்க்கையை வாழும் விதமாக தீபா ஆசை அனைத்தும் நிறைவேற போகிறது.

- Advertisement -spot_img

Trending News