ஞாயிற்றுக்கிழமை, அக்டோபர் 27, 2024

கோமதிக்கு சப்போர்ட் பண்ணி மச்சான்களிடம் பேசிய பாண்டியன்.. கதிரை வச்சு செய்யப்போகும் சம்பவம்

Pandian Stores 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில், ராஜி அப்பத்தாவை நினைத்து ரொம்பவே பீல் பண்ணுகிறார் என்று தெரிந்ததும் கதிர் உன்னை அப்பத்தா இருக்கும் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போகிறேன் என்று சொன்னார். அதே மாதிரி கோமதியும், அம்மாவை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு புலம்பிய நிலையில் கதிர் அதிரடியாக முடிவை எடுக்கும் விதமாக பாண்டியன், சக்திவேல் மற்றும் முத்துவேலுக்கு தெரியாமல் ராஜி மற்றும் அம்மாவை கூட்டிட்டு ஆஸ்பத்திரிக்கு போய்விட்டார்.

அங்கே ராஜி மற்றும் கோமதி, அப்பத்தாவை பார்த்து பேசி வீட்டுக்கு வந்து விட்டார்கள். இந்த பிரச்சினை இதோடு முடிந்து விடும் யாருக்கும் தெரியாது என்று கதிர் நினைத்து விட்டார். ஆனால் கோமதி, அம்மாவுக்காக கொடுத்துவிட்ட சாப்பாடு கேரியர் அங்கே தான் இருக்கிறது. அப்பொழுது ஆஸ்பத்திரிக்கு போன சக்திவேல் மற்றும் முத்துவேல், அந்த கேரியரில் கோமதி பெயர் இருப்பதை பார்த்து கோமதி ஆஸ்பத்திரிக்கு வந்தாளா என்று அதட்ட ஆரம்பித்து விட்டார்.

உடனே வடிவு, ஆமாம் அவங்களுடைய அம்மாவை பார்க்க வந்தாங்க நான் என்ன பண்ண முடியும் என்று சொல்லிவிட்டார். உடனே இதுதான் சண்டை போடுவதற்கு சான்ஸ் என்று சக்திவேல், முத்துவேல் மற்றும் குமரவேலு அனைவரும் பாண்டியன் வீட்டிற்கு முன்னாடி போய் நின்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டார்கள்.

அங்கே இருந்து வெளியே வந்த ஒட்டுமொத்த குடும்பமும் என்ன சொல்வது என்று தெரியாமல் தடுமாறி நிற்கிறார்கள். அப்பொழுது அங்கே வந்த பாண்டியன், ஆஸ்பத்திரியில் இருப்பது உனக்கு மட்டும் அம்மா இல்ல கோமதிக்கும் அம்மாதான். அதனால போய் பார்க்க தான் செய்வாங்க உன்னால என்ன பண்ண முடியும் என்று கோமதிக்கு சப்போர்ட் பண்ணி மச்சான்களிடம் கொந்தளித்து விட்டார்.

இதை எதிர்பார்க்காத கோமதி மற்றும் ஒட்டுமொத்த குடும்பமும் வாய் அடைத்துப் போய் அதிர்ச்சியாகி விட்டார்கள். அத்துடன் பாண்டியன் சொன்னதுக்கு எந்த மறுப்பும் தெரிவிக்க முடியாமல் மச்சான்களும் வாய் மூடிக்கொண்டு போய்விட்டார்கள். ஆனால் பாண்டியன் என்னதான் வெளியே சப்போர்ட் பண்ணி பேசி இருந்தாலும் வீட்டுக்குள் வந்து ரகளை பண்ணும் விதமாக ருத்ர தாண்டவம் ஆட போகிறார்.

அதாவது கோமதி மற்றும் ராஜி போனது கூட அவருக்கு பெரிய விஷயமாக இருக்காது. கதிர் தன்னிடம் சொல்லாமல் கூட்டிட்டு போனதன் பெரிய விஷயமாக பாண்டியனுக்கு இருக்கும். அதனால் வழக்கம்போல் கதிரை மட்டம் தட்டி பேசி பாண்டியன் ஒரு சம்பவத்தை செய்யப் போகிறார். இருந்தாலும் இதெல்லாம் எனக்கு சாதாரணம் என்பதற்கு ஏற்ப கதிர் எல்லாத்தையும் துடைத்துவிட்டு போகப் போகிறார்.

இதனை தொடர்ந்து கதிர் நமக்காக தான் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருக்கிறார் என்று ராஜி புரிந்து கொண்டு கதிரை மனதார நேசிக்க ஆரம்பிக்கப் போகிறார். அந்த வகையில் இனி அடுத்தடுத்து இவர்களுடைய ரொமான்ஸ் காட்சிகள் தான் அதிகரிக்கப் போகிறது.

- Advertisement -spot_img

Trending News