அந்த விஷயத்தில் கொஞ்சம்.. 3 குழந்தை வேணும்.. அதுவரைக்கும் ஓயமாட்டேன்

பிக் பாஸ் போட்டியாளரான அபிஷேக் ராஜா ஆரம்பத்தில் 2 மினிட் review செய்து புகழ்பெற்றவர். தொடர்ந்து பிக் பாசில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார். ஏற்கனவே திருமணம் ஆன இவர், தன் மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட அவரை விட்டு பிரிந்து விவாகரத்து பெற்றார். இதை தொடர்ந்து, யூடியூபர் சுவாதி நாகராஜன் என்பவரை 2வதாக திருமணம் செய்துக் கொண்டார்.

இவருடைய இரண்டாவது திருமணம் கடந்த ஜூன் மாதம் தான் நடைபெற்றது. தற்போது அவர் மனைவி கர்ப்பமாக உள்ளார். வளைகாப்பும் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. இவர்களின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தற்போது இயக்குநராக ஜாம் ஜாம் எனும் படத்தை இயக்கி வருகிறார். இதற்க்கு நடுவில் குடும்ப தலைவனாகவும் நல்ல கணவனாகவும் தனது கடமையை ஆற்றியுள்ளார். இப்படி இருக்க, இவர் சொன்ன சில விஷயங்கள் ரசிகர்களை நகைக்க வைத்துள்ளது.

3 குழந்தை வேணும்.. அது வரைக்கும் ஓயமாட்டேன்

தற்போது வளைகாப்பு நடந்து முடிந்துள்ள நிலையில், அபிஷேக் ராஜா தனது விருப்பத்தை கூறியிருக்கிறார். அவருக்கு 3 குழந்தைகள் வேண்டுமாம். பொதுவாக முதல் குழந்தைக்கு மட்டும் தான் வளைகாப்பு செய்வார்கள், ஆனால் அபிஷேக் ராஜா 3 குழந்தைக்கும் வளைகாப்பு செய்வாராம்.

அதுமட்டுமின்றி, அவருக்கு பெண் குழந்தை நிச்சயமாக வேண்டுமாம். பெண் குழந்தை பிறக்கும் வரை குழந்தை பெற்றுக்கொள்வேன். ஆல்ரெடி 3 குழந்தை டார்கெட். ஒருவேளை 3-உம ஆண் குழந்தையாக இருந்தால், பெண் குழந்தை பிறக்கும்வரை ஓயமாட்டேன் என்று கூறியிருக்கிறார். இதை தொடர்ந்து ரசிகர்கள்.. “நீங்க நடத்துங்க.. பல் இருப்பவன் தானே பக்கோடா சாப்பிட முடியும்..” என்று நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment