தமிழ்ல இங்க யாருக்கும் படம் எடுக்க தெரில.. கண்ணாடி மாளிகையில் இருந்துட்டு கல் எறியாதிங்க சித்தார்த்!

Siddharth: நடிகர் சித்தார்த் சமீபத்தில் பேசியிருக்கும் விஷயம் பெரிய அளவில் சர்ச்சையாகி இருக்கிறது. நடிகர்கள் சில நேரம் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி வம்பில் மாட்டிக் கொள்கிறார்கள்.

சித்தார்த் பேசியிருக்கும் விஷயத்திற்கு இனி அவர் தமிழ் படங்களில் நடித்த ரசிகர்கள் நிஜமாக எதிர்த்து கேள்வி கேட்பார்கள். ஏனென்றால் தமிழில் யாருக்கும் படம் எடுக்க தெரியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

இங்க யாருக்கும் படம் எடுக்க தெரில

இங்கே பிரமாதமான படங்களை எடுப்பதில்லை. 50 வருடங்களுக்கு முன்னாடி இருந்த இயக்குனர்களை ஒப்பிடும்போது இப்போது யாருக்கும் டைரக்சன் வரவில்லை என்று சொல்லி இருக்கிறார்.

சித்தார்த்தை மீண்டும் தமிழ் சினிமா ரசிகர்களிடம் கொண்டு வந்து சேர்த்தது சித்தா படம்தான்.

அப்படி போன்ற படத்தில் நடித்துவிட்டு தமிழில் படம் இயக்க தெரியவில்லை என்று அவர் பேசுவதெல்லாம் ரொம்ப தவறு.

இதைக் கேட்டு இயக்குனர்கள் மறுபடியும் இவருக்கு வாய்ப்பு கொடுக்க யோசிப்பார்கள் தானே. இதைத்தான் கண்ணாடி மாளிகையில் இருந்து கொண்டு கல்லை வீசுவது என்று சொல்வார்கள் போல.

இந்தியன் 2 படத்தால் அதிகம் கேலிக் கிண்டலுக்கு ஆளானதால் இப்படி பேசுகிறார் போல.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →

Leave a Comment