Manoj: மனோஜ் பாரதிராஜாவின் உயிரிழப்பு திரையுலகை அதிர வைத்துள்ளது. அவருடைய மறைவுக்கு ஒட்டுமொத்த தமிழகமும் இரங்கல் தெரிவித்து வருகிறது.
இந்த சூழலில் அவர் பற்றிய பல தகவல்கள் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது. அதில் அவருக்கு இருந்த மன அழுத்தம் பற்றிய செய்தி அதிர்ச்சியாக இருக்கிறது.
அவருடைய மரணத்திற்கு காரணம் மாரடைப்பு தான். சமீபத்தில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை முடிந்த நிலையில் அவர் மரணம் நிகழ்ந்துள்ளது.
நிறைவேறாத கடைசி ஆசை
48 வயதில் இதய பிரச்சினை வரும் அளவுக்கு என்ன அழுத்தம் அவருக்கு இருந்தது என தோன்றலாம். ஆனால் மிகப்பெரும் இயக்குனரின் மகன் சினிமாவில் பெரிதாக சாதிக்கவில்லை என்ற ஏச்சும் பேச்சு தான் முக்கிய காரணம்.
அதனாலேயே அவர் ஜெயித்து விட மாட்டோமா என்ற கனவுடன் ஓடிக்கொண்டிருந்தார். ஆனாலும் சுற்றி இருந்தவர்கள் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசி அவரை காயப்படுத்தி இருக்கின்றனர்.
இதை மனோஜ் ஒரு பேட்டியில் கூட சொல்லி இருந்தார். என்னை பற்றி பேசுபவர்களுக்கு என்னுடைய வலி என்ன தெரியும் என ஆதங்கத்தோடு சொல்லி இருந்தார்.
இதை தம்பி ராமையா கூட தற்போது வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அப்பா பெயரை காப்பாற்றலையே என ஏகப்பட்ட விமர்சனங்கள் இருந்தது.
இது எல்லாம் சேர்ந்துதான் அவரை அழுத்தத்துக்கு ஆளாகி விட்டது. உண்மையில் நமக்கு ஒரு விஷயம் செட் ஆகவில்லை என்றால் அடுத்த விஷயத்தை நோக்கி நகர்ந்து விட வேண்டும்.
வெளியில் சொல்ல முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளானதன் விளைவுதான் 48 வயதில் இந்த மரணம் என வருத்தத்தோடு கூறியுள்ளார்.
ஒரு இயக்குனராக சாதிக்க வேண்டும் என்பது மனோஜின் ஆசை. ஆனால் அது கடைசி வரை நிறைவேறாதது தான் சோகம்.