Mahanadhi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற மகாநதி சீரியலில், விஜய் மீது விழுந்த கொலை பழியிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்றால் வெண்ணிலா மனசு வைத்தால் தான் முடியும் என்று காவேரி முடிவு பண்ணி விட்டார். அதனால் காவிரி, வெண்ணிலாவிடம் விஜய் சம்பந்தமாக உன்னிடம் தனியாக பேச வேண்டும் என்று கூப்பிடுகிறார்.
வெண்ணிலவும் சரி என்று காவிரியுடன் போகும் பொழுது அதை கெடுக்கும் விதமாக பசுபதி ராகினி இந்த காவிரியை நம்பாத. ஏதாவது திருட்டு வேலையை பார்த்து உன் வாழ்க்கையை பாழாக்கி விடுவார் என்று வெண்ணிலாவிடம் சொல்கிறார்கள். ஆனால் காவேரி, இவங்க யாரு உனக்கு துணையாக இருந்தாலும் விஜய் கூட நீ சேர முடியாது.
நான் மனசு வைத்தால் மட்டும் தான் நீ நெனச்சது நடக்கும் என்று வெண்ணிலாவை காவேரி லாக் பண்ணி விட்டார். உடனே வெண்ணிலாவும், எனக்கு விஜய் முக்கியம் அதனால் நான் காவேரி என்ன சொல்ல வருகிறார் என்பதை கேட்டுவிட்டு வருகிறேன் என்று காவிரியுடன் கிளம்பி விடுகிறார். அப்படி காவிரி வெண்ணிலாவை கூட்டிட்டு போன இடம்தான் விஜயின் ஆபீஸ்.
அங்கே விஜயின் நண்பர் மூலம் காவேரி வெண்ணிலா இருவரும் பேசுவதை வீடியோ எடுக்க சொல்லிவிடுகிறார். அதன் பிறகு காவேரி, நைசாக பேசி காரியத்தை சாதிக்கும் விதமாக வெண்ணிலா வாயாலயே உண்மையை சொல்லும் விதமாக அனைத்தையும் சொல்ல வைத்து விட்டார். வெண்ணிலாவும் விஜய் நமக்கு கிடைப்பார் என்ற ஆசையில் ராகினி பசுபதி சொன்னபடி தான் நான் எல்லாத்தையும் செய்து வருகிறேன்.
விஜய் மீது எந்த தவறும் இல்லை, விஜய்யை இப்படி பொய் சொல்லி லாக் பண்ணினால் தான் விஜய் என் கழுத்தில் தாலி கட்டுவார் என்று சொன்னார்கள். அதனால் தான் நானும் விஜய் எனக்கு வேண்டும் என்பதற்காக அப்படி பொய் சொல்லி விட்டேன் என்று சொல்லி விடுகிறார். உடனே காவிரிn வெண்ணிலாவை கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போயி அந்த வீடியோவை காட்டி விடுகிறார்.
அந்த வீடியோவை போலீஸ் பார்த்ததும் விஜய் மீது எந்த தவறும் இல்லை என்று விட்டு விடுகிறார்கள். விஜய் தன்னை காப்பாற்றியது தன்னுடைய பொண்டாட்டி காவிரி தான் என்ற நினைப்பில் கெத்தாக போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளி வருகிறார். விஜய்யை பார்த்த சந்தோஷத்தில் காவிரியும், விஜய்யை அரவணைத்துக் கொள்கிறார். வெண்ணிலவை வைத்து காவிரி விஜய் வாழ்க்கையை முடித்து விடலாம் என்று நினைத்த பசுபதி ராகினிக்கு கடைசியில் அவமானமாக போய்விட்டது.
வெண்ணிலா மூலம் காவேரி, ராகினி பசுபதிக்கு சரியான பதிலடி கொடுத்து மூஞ்சில் கரியை பூசி விட்டார். இன்னொரு பக்கம் இந்த பிரச்சனையால் சாரதா வருத்தத்தில் இருக்கிறார். இனி இவங்களை சமாதானப்படுத்தும் விதமாக காவிரி கர்ப்பமான விஷயத்தை விஜய் மூலம் வெளிவரப் போகிறது.